Followers

Saturday, April 19, 2014

ஆன்மீக அனுபவங்கள் 160


வணக்கம் நண்பர்களே!

                                     ஆன்மீக அனுபவங்களை பார்த்து நீண்ட நாட்களாகவிட்டது. இப்பதிவில் ஒரு தகவலை பார்க்கலாம். ஒரு அமெரிக்காவில் வசிக்கும் நபர் என்னிடம் போனில் பேசும்பொழுது ஒரு தகவலை கேட்டார்.

எனது ஜாதகத்தில் ஒரு சில கிரகங்களால் நான் ஆன்மீகவாதியாக மாறமுடியாது. ஜாதகத்தை பார்த்தார்கள் என்றால் என்னை சேர்த்துக்கொள்ளமாட்டார்கள் என்று சில சோதிடர்கள் சொல்லுகிறார்கள். அப்படியா சார் என்று கேட்டார். 

ஒரு ஆன்மீகவாதி எந்த காலத்திலும் தன்னிடம் ஆன்மீகம் கற்க வருபவர்களின் ஜாதகத்தை வாங்கி பார்க்கமாட்டார். இந்த கிரகங்களை எல்லாம் தாண்டி வேலை செய்வது ஆன்மீகம். அப்படி இருக்கும்பொழுது எப்படி ஆன்மீகவாதி உங்களின் ஜாதகத்தை வாங்கிப்பார்ப்பார்.

ஒரு ஆன்மீகவாதிக்கு எந்த தகுதியும் தேவையில்லை அவன் மனிதனாக இருக்கிறானா என்று தான் குருமார்கள் பார்ப்பார்கள். உங்களிடம் சக்தியை கொடுத்துப்பார்ப்பார்கள். அதனைவைத்து நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்று பார்ப்பார்கள். அதனை தவறாக பயன்படுத்தினால் எடுத்துவிடுவார்கள். நன்றாக பயன்படுத்தினால் உங்களுக்கு நிறைய விசயங்களை சொல்லிக்கொடுப்பார்கள்.

கொடுப்பவர்களுக்கு கண்டிப்பாக எடுக்க தெரியும். நமது மதத்தில் ஒரு சிலரை பார்த்தால் திருடர்களாக இருந்து இருப்பார்கள் அல்லது தீயவர்களாக இருந்து இருப்பார்கள். அவர்கள் எல்லாம் மிகப்பெரிய சாதனை செய்வார்கள். இவர்களுக்கு எல்லாம் எப்படி குரு மார்கள் கற்றுக்கொடுத்தார்கள். எப்படி என்றால் அவர்கள் உங்களை மனிதர்களாக மட்டுமே பார்க்கிறார்கள். குருவிடம் வாங்கிய பிறகு  எப்படி இருக்கிறாய் என்று பார்ப்பார்களே தவிர முன்னாடி எப்படி இருந்தீர்கள் என்று பார்க்கமாட்டார்கள். அனைவரும் ஆன்மீகவாதியாக மாறுவதற்க்கு தகுதி உடையவர்களே

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: