Followers

Friday, April 18, 2014

சுக்கிரனுக்கு பரிகாரம்


ணக்கம் ண்பர்களே!
                    சுக்கிரனுக்கு பரிகாரம் ஒன்றை இப்பதிவில் பார்க்கலாம். மனிதனுக்கு இன்றைய காலகட்டத்தில் பணம் அதிகமாக தேவைப்படுகிறது. அந்த பணம் மிக எளிதாகவும் வரவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். பணம் அதிக அளவில் வருவதற்க்கு சுக்கிரன் காரகம் வகிக்கிறார். அப்படிப்பட்ட சுக்கிரனுக்கு பரிகாரம் நாம் செய்யும் பொழுது மட்டுமே நமக்கு அதிகமாக வரும்.

பரிகாரம் செய்யும்பொழுது நமக்கு உடனே பலன் கிடைத்துவிடும் என்று நம்புவதும் தவறு. தொடர்ச்சியாக நாம் செய்யும்பொழுது மட்டுமே நமக்கு பலனை தரும். 

சுக்கிரன் என்றாலே அம்மன் வழிபாடு என்பது உங்களுக்கு தெரியும். அதே நேரத்தில் பிராமணர் பூஜிக்காத அம்மனாக இருந்தால் போதும். உங்களுக்கு அந்த அம்மன் அனைத்தையும் பெற்று தந்துவிடும். 

சுக்கிரன் காரகம் வகிக்கும் விசயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தும்பொழுது உங்களுக்கு சுக்கிரனின் சக்தி கிடைக்கும். வாரம் ஒரு முறை பெரிய மால்க்கு சென்று வாருங்கள். பெரிய உணவு விடுதிக்கு சென்று வாருங்கள். நல்ல திரையரங்குக்கு சென்று வாருங்கள். என்ன டா பரிகாரம் இப்படி சொல்லுகிறார் என்று நினைக்க தோன்றும். நான் சொன்ன இடம் அனைத்தும் சுக்கிரனின் சக்தி அதிகம் கிடைக்கும்.

ஒரு மால்க்கு சென்று வருவதால் நமது மனமும் இப்படி எல்லாம் நாமும் வாழவேண்டும். அதாவது அங்கு வரும் உயர் வகுப்பு மக்களை போல் வாழவேண்டும் என்று மனது நினைக்கும். மனதிற்க்கு ஒரு தெம்பு கிடைக்கும். சுக்கிரனின் சக்தி அப்படிப்பட்டது. 

ஒவ்வொரு நாளும் தரித்திரம் பிடித்த மக்களோடு வாழ்ந்துக்கொண்டு இருந்தால் அவர்களின் கீழ் தனமான எண்ணம் உங்களை பிடித்து கீழே தள்ளிவிடுமே தவிர ஒரு பொழுதும் உங்களை உயர்த்தாது. மேல்தட்டு மக்கள் வரும் இடங்களுக்கு நீங்கள் செல்லும்பொழுது உங்களுக்கு தெரியாமலே உங்களின் மனதிற்க்கு தெம்பு கிடைக்கும். நீங்களும் அந்த வாழ்க்கைக்கு வாழவேண்டும் என்று நல்ல வழியில் சென்று அதனை அடைய முயற்சி செய்வீர்கள். ஒவ்வொரு இடத்திற்க்கும் நாம் செல்லும்பொழுது அந்த சக்தியை பெறமுடியும் இது அனுபவ உண்மை. 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Appadiye seyyalam sir.