Followers

Monday, April 28, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    விரைய தசாவை படித்துவிட்டு நண்பர் என்னிடம் போன் செய்து எனக்கு அவ்வாறு நடைபெறவில்லையே என்று சொன்னார்.

நடைபெறவில்லை என்றால் நல்லது. ஏன் என்றால் இது எல்லாம் நடைபெற்றுவிடகூடாது என்று தான் எழுதிக்கொண்டு இருக்கிறேன். ஒவ்வொரு குடும்பமும் குறிப்பாக நடுத்தர வசதியுள்ள குடும்பங்கள் தங்களின் வாழ்க்கையை ஒட்டுவதற்க்கே கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும் இந்த காலத்தில் இது வேற வந்துவிட்டால் குடும்பம் அழிந்துவிடும். மறுபடியும் தூக்கி நிறுத்துவதற்க்குள் இந்த காலத்தில் முடியாத காரியமாக போய்விடும்.

வெற்றி என்பது தொடர்ச்சியாக அதனை தக்க வைத்துக்கொண்டால் மட்டுமே அது வெற்றி இல்லை என்றால் அது வெற்றி கிடையாது. ஏழை குடும்பமாக இருந்து நடுத்தர குடும்பத்திற்க்கு வருவதற்கே அவ்வளவு கஷ்டப்பட்டு வந்து இருப்பீர்கள் அதனை ஏன் தொலைக்கவேண்டும்.

நான் எழுதுகின்ற கெட்ட விசயம் எதுவும் உங்களுக்கு நடந்துவிடகூடாது என்பதால் தான் ஒரு நாளைக்கு பல பதிவுகள் வழியாக உங்களுக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.இது கெடுதல் என்று நான் சொல்லிவிட்டால் அதனை தவிர்க்க நீங்கள் பார்ப்பீர்கள் அல்லவா அந்த காரணத்தால் தான் ஒவ்வொரு கெடுதலாக பட்டியல் போட்டு சொல்லி்க்கொண்டு இருக்கிறேன்.

விரைய தசாவில் உங்களுக்கு கையில் பணம் வருவது கொஞ்சம் கடினமாக இருக்கும். மற்றபடி சுபவிரையங்கள் வந்தால் போதும் என்று ஆண்டவனிடம் பிராத்தனை செய்தால் போதும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: