Followers

Sunday, April 20, 2014

பிரச்சினையை தீர்க்கமுடியும்


வணக்கம் நண்பர்களே!
                   ஒவ்வொரு வழிப்பாட்டையும் நாம் பார்க்கும்பொழுது ஜாதகத்தில் இருந்து வரும் எப்பேர்ப்பட்ட பிரச்சினையும் நாம் தீர்த்துவிடமுடியும் என்று தோன்றுகிறது. இவ்வளவு வழிபாடு இருந்தும் நமது மக்கள் ஏன் பிரச்சினையில் சிக்கி தவிக்கின்றனர் என்றால் அது சோம்பேறி தனத்தை தவிர வேறு ஒன்றும் கிடையாது அல்லது இந்த வழிபாடுகளைப்பற்றி சரியான கைடு இல்லாத காரணத்தால் மட்டுமே பிரச்சினை வருகிறது.

என்னை பொருத்தவரை  என்னால் முடிந்தளவு உங்களுக்கு வழிகாட்டுவதற்க்கு ஜாதககதம்பத்தில் வழி செய்துவிடுகிறேன். உங்களின் ஜாதகங்களை பார்த்து அதனை சரிசெய்துக்கொள்ளுங்கள்.உங்களை தயார் படுத்திக்கொள்ள முதலில் நீங்கள் குலதெய்வ வழிப்பாட்டையும் உங்களுக்கு பித்ரு தோஷம் இருந்தால் அதனையும் போக்கிக்கொள்ள வேண்டும். குலதெய்வத்திற்க்கு உங்களின் பித்ருக்களுக்கு எல்லாம் நான் பரிகாரம் செய்துக்கொண்டு இருக்கமுடியாது. நீங்கள் தான் செய்யவேண்டும்

உங்களின் ஜாதகத்தில் உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் என்ன என்று தெரியும் அதே நேரத்தில் அந்த பிரச்சினைக்கு எங்கு தீர்வு வைத்திருக்கிறான் என்பதும் தெரியும். இவ்வளவு நாள்கள் நீங்கள் சோதிடத்தைப்பற்றி தெரியும். அதனை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். அப்படி உங்களுக்கு சோதிடம் தெரியவில்லை என்றால் கட்டண சோதிடத்தி்ல் வந்து கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.

பிரச்சினை வந்துவிட்டது என்னிடம் வந்தால் உடனே தீர்ந்துவிடும் என்ற நினைப்போடும் வராதீர்கள் ஏன் என்றால் பிரச்சினையை பொருத்து எவ்வளவு காலம் எடுக்கும் என்பதும் ஒரு விதி இருக்கிறது. அந்த காலத்தில் தான் அந்த பிரச்சினை தீரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Sir mana amaithikku entha valipadu seyvadhu itharku oru padhivu podungal.