Followers

Monday, April 21, 2014

அற்புத மந்திர ஜெபம்


வணக்கம் நண்பர்களே!
                    ஒருவரின் ஜாதகத்தில் சனிக்கிரகம் பனிரெண்டாவது வீட்டில் இருக்கும்பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு ஆயுளைப்பற்றி அதிக கவனம் செலுத்தவேண்டும். லக்கினத்திற்க்கு பனிரெண்டு என்று வரும்பொழுது நாம் அதிக கவனம் செலுத்தவேண்டும். லக்கினத்தை பதம்பார்த்துவிடும் என்பதால் இப்படிப்பட்ட ஜாதகரை நான் பரிகாரம் செய்ய சொல்லுவேன்.

கர்மகாரகன் விரயத்திற்க்கு சென்றுவிட்டால் அனைத்திலும் பிரச்சினை மட்டுமே எஞ்சி நிற்க்கும். அட பிரச்சினை இருந்தால் சமாளித்துவிடலாம். உயிர் போய்விட்டால் என்ன செய்வது அதற்கு பரிகாரமாக நான் சொல்லுவது திருகடையூர் சென்று சாமியை தரிசனம் செய்துக்கொண்டு வாருங்கள் என்று சொல்லுவேன்.

தினமும் வீட்டில் மிருத்யுஞ்சய மந்திர ஜெபத்தை செய்யுங்கள். இந்த மிருத்யுஞ்ச மந்திரம் மற்றும் ஸ்தோத்ரம் நெட்டில் கிடைக்கிறது. தேடி எடுத்து பயன்பெற்றுக்கொள்ளுங்கள்.

இதனை நான் பலவேறு உயிர்களை காப்பதற்க்கு பயன்படுத்தி உள்ளேன். தினமும் ஒரு உயிரை காப்பாற்றவேண்டும் என்ற காரணத்தால் இந்த மந்திரத்தை நான் பயன்படுத்துவேன். நீங்களும் இதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள். சனி பனிரெண்டில் மற்றும் ஆயுள் அல்லது நோய் வந்தால் இந்த மந்திரத்தை தாராளமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

உங்களின் வீட்டில் பூஜையறையில் தினமும் இந்த மந்திரத்தை பயன்படுத்தலாம் அல்லது உங்களின் செல்போனில் வைத்து கேட்டுக்கொள்ளலாம். அனைவரும் இந்த மந்திரத்தை சொல்லலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

KJ said...

Sir, Daily morning Vasanth tv 6.05am, this mantram is getting relayed for 15 minutes. Its very useful.