Followers

Tuesday, April 22, 2014

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    நேற்றைய அறிவிப்பை படித்துவிட்டு பல நண்பர்கள் எனக்கு போன் செய்து என்ன சார் இப்படி அறிவிப்பை அறிவித்துவிட்டீர்களே என்று கேட்டார்கள்.

உங்களுக்கு எல்லாம் ஒரு நல்ல விசயத்தை செய்து இருக்கிறேன் என்று நினையுங்கள். என்னை நம்புவதை விட அம்மனை நம்புவது மிக மிக நல்லது என்று சொல்லுவேன். நான் இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம் அம்மன் அப்படியே இருக்கும். உங்களை அதற்கு தயார் செய்யவேண்டும் என்பதால் இப்படி அறிவிப்பை வெளியிட்டேன்.

மக்கள் என்னை சந்திக்க வருவது வந்தவுடன் என்னை காப்பாற்றுங்கள் என்று என்னிடம் கேட்பது இது தான் வேலையாகவே வைத்து இருக்கிறார்கள். அம்மனிடம் வேண்டுதலை வையுங்கள் என்று சொன்னால் அது எல்லாம் தெரியாது சார். நீங்கள் காப்பாற்றுங்கள் என்று சொல்லுகிறார்கள். அம்மனை பொருத்தவரை பொதுவான ஒரு தெய்வம். அதனிடம் வேண்டுதல் வைப்பதற்க்கு சோம்பேறி தனத்தை நானே உருவாக்குவது போல் இருந்தது அதனால் தவிர்த்துவிட்டேன்.

அம்மனிடம் வேண்டுதலை வைத்து உங்களுக்கு தேவையானவற்றை அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். நமது மக்கள் அதனை செய்வது கிடையாது. வேண்டுதல் வைப்பதற்க்கு கஷ்டமாக இருக்கின்றது என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்.ஒரு தவறான வழியை உருவாக்க கூடாது என்பதால் சந்திப்பதை தவிர்க்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: