Followers

Wednesday, April 9, 2014

அம்மன் பூஜை


ணக்கம் ண்பர்களே!
                    நமது அம்மனின் பூஜை அடுத்த வாரத்தில் நடைபெறும். தேதியை பின்னர் அறிவிக்கிறேன். ஒரு சில நண்பர்கள் மாதம் ஆரம்பித்தவுடன் எனது வங்கி கணக்கில் பூஜைக்கான பணத்தை செலுத்துவிட்டனர். வேண்டுதல் வைத்து இதுவரை நடைபெற்றவர்கள் வேண்டுதல் காணிக்கையாக செலுத்தவிரும்பினால் பூஜைக்கான பணத்தை செலுத்தலாம்.

புதிதாக அம்மனிடம் வேண்டுதல் வைப்பவர்கள் நாளை வியாழக்கிழமை முதல் வேண்டுதலை வையுங்கள். ஒரு சிலர் எப்படி சார் வேண்டுதல் வைப்பது என்றும் கேட்கிறார்கள். காலையில் எழுந்து குளித்துவிட்டு அம்மனின் படத்தை பார்த்து மனமுருகி வேண்டுதலை வையுங்கள். அடுத்த மாதப்பூஜைக்குள் உங்களின் வேண்டுதலை அம்மன் நிறைவேற்றிக்கொடுப்பாள்.

ஒரு சிலர் கொடுத்த பணம் திரும்பி வரவேண்டும் என்று வேண்டுதலை வைப்பதாக எனக்கு தகவல் வந்தது. அந்த மாதிரியான வேண்டுதலை அதிகப்பட்சம் அம்மன் செய்து தருவதில்லை. நியாயமான வேண்டுதலை வையுங்கள். உங்களின் பணம் கொடுத்தது நியாயம் தான் ஆனால் வாங்கியவனிடம் பணம் இல்லை என்றால் அவன் எங்கு செல்வான். ஒரு சிலருக்கு மட்டும் இந்த வேண்டுதலை நடத்திக்கொடுக்கிறாள்.

நாளை முதல் வேண்டுதலை வையுங்கள். அம்மனின் அருள் உங்களுக்கு கிடைக்கும்.காயத்ரி மந்திரப்பயிற்சி செய்பவர்களும் அம்மனிடம் வேண்டுதலை வைக்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

nallur parames said...

Gayathri manthira payirchi eppati seyya vendum enru oru vilakkamana padhivu podungal sir

rajeshsubbu said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார். தெரியபடுத்தியதற்க்கு நன்றி சார்.