Followers

Thursday, April 24, 2014

அதிர்ஷ்டம் வரும் வழி


ணக்கம் ண்பர்களே!
                    அதிர்ஷ்டம் வரும் வழியில் ஒரு கருத்தை சொல்லுகிறேன். படித்து பாருங்கள்.

உங்களுக்கு மாந்தீரிக பாதிப்பு எல்லாம் அவ்வளவு எளிதில் வராது. மனிதர்களின் கண் பாதிப்பு தான் உங்களின் வளர்ச்சியை தடைச்செய்யும் காரணிகளாக அமையும். இதனைப்பற்றி பழைய பதிவில் நான் சொல்லியுள்ளேன். மீண்டும் இன்று சொல்லுவதற்க்கு ஒரு வாய்ப்பு உருவாகியது அதனால் சொல்லுகிறேன். 

ஒரு மனிதனின் கண் உங்கள் மீது விழுந்தால் அதுவும் பொறாமையுடன் விழுந்தால் உங்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். நன்றாக இருப்பவர்களை கீழே விழுந்த கதை எல்லாம் இந்த காரணத்தால் மட்டுமே நடைபெறும்.இன்று உங்களுக்கு பணம் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த விபரத்தை பத்து பேரிடும் சொல்லிபாருங்கள். வரவேண்டிய பணம் உங்களுக்கு வந்து சேராது.

பத்து பேரின் மனம் பல விதத்திலும் கணக்கு செய்யும். அந்த மனதின் எதிர்மறையான எண்ணத்தால் உங்களுக்கு வரவேண்டிய பணம் வராது. பெரிய அளவில் இருப்பவர்கள் எல்லாம் இதற்கு முதல் வழியை செய்துக்கொள்வார்கள். கண் அடி இல்லை என்றால் நீங்கள் எளிதில் வெற்றிப்பெற்றவர்களாக மாறிவிடுவீர்கள். நான் பழைய பதிவில் சொல்லியுள்ளேன் தேடிபிடித்து படித்துக்கொள்ளுங்கள். கல் அடிப்பட்டாலும் கண் அடிபடக்கூடாது.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Aamam sir enakkum ithil anupavam ulladhu.