Followers

Sunday, April 27, 2014

அம்மனிடம் வேண்டுதல்


ணக்கம் ண்பர்களே!
                    பல நண்பர்கள் என்னிடம் பேசும்பொழுது அவர்களின் பிரச்சினை சொல்லுகிறார்கள். அதனை நான் வரவேற்க்கிறேன் அதே நேரத்தில் உங்களின் பிரச்சினை முதலில் என்னிடம் சொல்லவேண்டும் என்று நினைக்கவேண்டாம். அம்மனிடம் வேண்டுதலை வையுங்கள். அதன் பிறகு என்னிடம் சொல்லுங்கள். 

உங்களை எல்லாம் சந்திக்காமல் இருப்பதற்க்கு காரணம் என்னை சந்தித்தால் உங்களின் ஒவ்வொரு பிரச்சினைக்கும் என்னிடமே தேடி வந்துவிடுவீர்கள். அது எத்தனை நாளைக்கு தான் செய்யமுடியும். நீங்களாகவே வேண்டுதலை வைத்து நிறைவேற்றிக்கொள்ள கற்றுக்கொண்டாலே போதும். 

அம்மனிடம் உங்களின் குறைகளை சொல்லும்பொழுது உங்களின் மனதிற்க்கு ஒரு ஆறுதலை கண்டிப்பாக உங்களுக்கு கொடுக்கும். அதன் பிறகு உங்களின் குறைகளை நிறைவேற்றிக்கொடுக்கும்.

அம்மனிடம் வேண்டுதல் வைப்பது எப்படி என்று தெரியவில்லை என்று ஒரு சிலர்  கேட்கின்றனர். காலையில் எழுந்து குளித்துவிட்டு நமது ஜாதககதம்பத்தில் உள்ள அம்மனின் போட்டோவை பார்த்து மனதார வேண்டுங்கள் போதும். உங்களின் வேண்டுதல்களை அம்மன் நிறைவேற்றிக்கொடுக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: