Followers

Saturday, April 19, 2014

அதிர்ஷ்டம் வரும் வழி


வணக்கம் நண்பர்களே!
                    அதிர்ஷ்டம் வரும் வழியில் ஒரு வழிபாடு ஒன்று உள்ளது. இதனைப்பற்றி சிறிய முன்னோட்டம் போல் பார்க்கலாம். ஒரு சில விதிகளை மீறுவதற்க்கு எனக்கு உரிமை இல்லாத காரணத்தால் இந்த வழிப்பாட்டை முழுவதும் உங்களுக்கு தரமுடியவில்லை.

ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு தேவியாக அம்மன் வரும்பொழுது அதிர்ஷ்டத்திற்க்கும் ஒரு தேவியாக உருவாக்கி அதனை வழிப்பட்டால் நமக்கு அதிர்ஷ்டம் வரும் என்று நமது ஆன்மீகவாதிகள் சொல்லியுள்ளனர். அதாவது அதிர்ஷ்ட தேவி என்று அந்த தேவிக்கு பெயர் சூட்டியுள்ளனர். இந்த வழிபாடு எல்லாம் வடமாநிலத்தில் பிரபலமான ஒன்று. வடமாநிலத்தில் உள்ள மக்கள் உங்களுக்கு தொடர்பு இருந்தால் அவர்களிடம் கேட்டு எப்படி செய்வது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

இந்த அதிர்ஷ்டதேவி உங்களுக்கு எல்லா அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும் வல்லமை பெற்றது.இதற்கு என்று தனியாக மந்திரங்கள் உள்ளன. அந்த மந்திரத்தை நாம் உரு ஏற்றும்பொழுது நமக்கு அதிர்ஷ்டம் வரும். இதனை செய்யும்பொழுது உங்களுக்கு உங்களின் நட்சத்திரத்திற்க்கு தகுந்தவாறு மலர்களை வைத்து பூஜை செய்யவேண்டும். அப்பொழுது உங்களுக்கு அதிர்ஷ்டதேவி அனைத்து அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.

இந்த வழிப்பாட்டை விடியற்காலையில் செய்யவேண்டும். அதாவது பிரம்மமுகூர்த்த வேளையில் செய்யவேண்டும் என்பது விதி. இதனைப்பற்றி விசாரித்துக்கொண்டு செய்துக்கொள்ளுங்கள்.

ஒரு சில தென்னிந்த மக்கள் செய்கின்றனர் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அதுவும் வடமாநிலத்தினர் கற்றுக்கொடுத்துள்ளனர் என்று சொல்லியுள்ளார்கள். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். தகுந்த நேரம் வரும்பொழுது நமது பதிவில் பகிர்ந்துக்கொள்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: