Followers

Tuesday, April 8, 2014

குரு தசா பரிகாரம்


ணக்கம் ண்பர்களே!
                    ஒரு நண்பர் காலையில் எனக்கு போன் செய்து என்ன சார் குரு தசா பார்த்து வந்தோம். விடியற்காலையில் ராகு கேதுவிற்க்கு பரிகாரம் சொல்லுகிறீர்கள். எனக்கு குரு தசா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ஒரு நல்ல பரிகாரம் சொல்லுங்கள் என்று சொன்னார்.

உங்களுக்கு குரு தசா நடைபெற்றால் வேதங்களை கற்பதற்க்கு முயற்சி எடுங்கள். பூஜை முறைகளில் அதிக கவனம் செலுத்துங்கள். வியாழக்கிழமை உங்களுக்கு பொன்னான நாளாக இருக்கும். அனைத்து நல்ல காரியங்களையும் வியாழக்கிழமை செய்வது போல் செய்யுங்கள்.

ஊரில் இருக்கும் பழமையான கோவில்களுக்கு உங்களால் முடிந்த உடல் உழைப்பை கொடுங்கள். ஒரு சில இடத்தில் கோவில்கள் பூஜை செய்யாமல் இருக்கும். பூஜை செய்வதற்க்கு ஏற்பாடு செய்யுங்கள்.

வீட்டில் ஹோமங்களை நடத்துங்கள். ஊரில் கோவில் காரியங்களில் உங்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கட்டும். சைவ உணவுகளை அதிகமாக சாப்பிடுங்கள்.ஒரு அந்தணர் போல் இருங்கள்.

உங்களுக்கு தொழில் கற்றுக்கொடுத்தவர்கள் அனைவரும் குருவாக தான் இருப்பார்கள். அவர்களுக்கு உங்களின் உதவிகளை செய்யுங்கள். பள்ளிகுழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்யுங்கள். ஏழை குழந்தைகளுக்கு படிப்பதற்க்கு உதவி செய்யுங்கள். இதனை எல்லாம் நீங்கள் செய்தால் உங்களுக்கு குரு தசா யாேக தசாவாக இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: