Followers

Saturday, April 5, 2014

தொழிலுக்கு முதலிடம்


ணக்கம் ண்பர்களே!
                    நாம் என்ன தான் திறமையாக இருந்தாலும் நம் திறமையை மீறி பல விசயங்கள் நமக்கு எதிராக நடக்க ஆரம்பித்துவிடும். அப்பொழுது தான் அவர்களின் திறமை மீது ஒவ்வொருவருக்கும் சந்தேகம் வந்துவிடும். சந்தேகம் வந்த நேரத்தில் இருந்து சோதிடப்பக்கம் வருவதற்க்கு ஆரம்பித்துவிடுவார்கள்.

நான் இப்பொழுது தொழில் செய்யும் நண்பர்களுக்கு என்று ஆன்மீகவிசயங்கள் செய்துக்கொடுக்கும் அனைவரும் மிகவும் திறமைசாலிகள் ஆனால் அவர்கள் கிரகங்களின் தாக்குதலுக்கு ஆளாகி தன் தொழில் திறமையை நிருபிக்கமுடியாமல் போனவர்கள். அவர்களை நான் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆன்மீக விசயங்கள் செய்துக்கொடுக்கும்பொழுது இப்பொழுது முன்னேற்றபாதையில் செல்லுகின்றனர்.

தொழிலில் உள்ள அவர்களின் அறிவும் எனது ஆன்மீக விசயங்களும் சேரும்பொழுது வெற்றி வந்து அவர்களின் வாசல் கதவை தட்டுகிறது. நான் பொதுவாக தனி நபருக்கு செய்துக்கொடுப்பது எல்லாம் குறைந்து வருகிறது. அதற்கு காரணம் எனது எண்ணம் முழுவதும் தொழில் முன்னேற்றத்திலேயே இருப்பதால் மட்டுமே.

ஒரு நேரத்தில் பணம் வாங்காமல் செய்துக்கொடுத்த விசயம் அனைத்தும் இப்பொழுது பணம் வாங்கி்க்கொண்டு செய்துக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன். அம்மனை பொருத்தவரை பணத்தை யார் வந்து என்னிடம் கொட்டுகிறார்களாே அவர்களின் வியாபாரம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்.

ஒவ்வொரு தொழில் செய்யும் நபர்களுக்கும் நான் கொடுக்கும் ஆன்மீக சக்தி அப்பேர்ப்பட்டது. மிக சிறந்த சக்தியை என்னிடம் தொழில் செய்பவர்கள் உணர்ந்துள்ளனர். இந்த சக்தியை முழுவதும் அவர்கள் பயன்படுத்தமுடியுமா என்று கூட எனக்கு சந்தேகம் வரும். நான் அவர்களுக்கு செய்துவிட்டு பயன்படுத்திக்கொள் என்று சொல்லுவேன். அவர்களுக்கு பலவேறு இடத்தில் இருந்து வாய்ப்பு குவியும். அதனை அவர்கள் பயன்படுத்திக்கொள்வதில் திணறுவார்கள்.

தொழில் செய்யும் நபர்களுக்கு நான் செய்யும் ஆன்மீகவிசயங்கள் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பை கொடுக்கும். அவர்களின் குடும்பத்தை நான் காப்பாற்றும்பொழுது மட்டுமே அவர்கள் நிம்மதியாக இருந்து தொழில் செய்யமுடியும். அந்த காரணத்தால் இப்படி செய்கிறேன்.

இதனை ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் நீங்களும் ஒரு நாள் ஆன்மீகவாதியாக மாறி இப்படி பல பேர்க்கு உங்களின் சக்தியை நிருபித்து காட்டுங்கள். நீங்களும் உயரமுடியும் மற்றவர்களும் உயருவார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: