Followers

Friday, April 18, 2014

பெருமாள்


ணக்கம் ண்பர்களே!
                    அம்மன் பூஜையை முடித்துவிட்டு சென்னைக்கு இன்று வந்துவிட்டேன். இனி உங்களின் ஆத்மாவிற்க்கு அமைதியை தரும் பதிவுகளை தரவேண்டியது தான் எனது வேலை. 

எனது நண்பர் ஒருவர் ஒரு கேள்வியை கேட்டுருந்தார். பெருமாளை கும்பிட்டால் தான் மோட்சம் கிடைக்கும் என்று சொல்லுகிறார்கள். நீங்கள் பெருமாளை கும்பிட்டால் மோட்சம் கிடைக்காது என்று பதிவில் சொல்லியுள்ளீர்கள். அதனைப்பற்றி விளக்கப்பதிவை ஒன்றை போடுங்கள் என்று கேட்டார்.

பெருமாளை கும்பிட்டால் மோட்சம் கிடைக்கும். பெருமாளே கதி என்று கிடக்கவேண்டும். பெருமாளை கும்பிட்டுவிட்டு பணம் பணம் பணம் என்று அலைபவர்களுக்கு எப்படி பெருமாள் மோட்சத்தை தருவார் என்று தான் அந்த பதிவில் கேட்டுருந்தேன். பெருமாளை பற்றி சொன்ன ஆழ்வார்கள் அனைவரும் தெருக்கோடியில் நின்று பாடினார்கள். இன்று பெருமாளை கும்பிடுபவர்களை பார்த்தால் அப்படியா தெரிகிறது.

ஆழ்வார்கள் நினைத்து இருந்தால் இருக்கிற அனைத்து நாட்டையும் விலைக்கொடுத்து வாங்கி இருக்க முடியும் ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை. ஏன் அவ்வாறு செய்யவில்லை என்றால் எனக்கு உன்னிடத்தில் சரணடையவேண்டுமே தவிர வேறு எதுவும் எனக்கு தேவையில்லை என்று மனதில் நினைத்தார்கள். நம் ஆட்கள் அப்படியா இருக்கிறார்கள்.

மோட்சம் தான் வேண்டும் என்றால் அங்கு பணத்திற்க்கு வேலை இல்லை. பணம் வேண்டும் என்று மனதில் நினைப்பு இருந்தால் கண்டிப்பாக மோட்சத்தைப்பற்றி நினைப்பு இருக்ககூடாது. பெருமாள் மோட்சத்தை கொடுப்பார். உன்னிடம் பணம் இருந்தால் கண்டிப்பாக உன்னை நோக்கி திரும்பி கூட பார்க்கமாட்டார்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: