Followers

Friday, April 4, 2014

அம்மன் அழகு


ணக்கம் ண்பர்களே!
                   பூஜைகளைப்பற்றி சொன்னவுடன் ஏன் அம்மனுக்கு மட்டும் நிறைய செய்யவேண்டும் என்று சொல்லுகிறேன் என்றால் அம்மன் பெண் சக்தி. உலகத்தில் உள்ள பெண்களுக்கு எல்லாம் பொதுவாக ஒரு குணம் இருக்கும். பெண்களுக்கு நாம் ஏதாவது செய்தால் மட்டுமே நமக்கு அவர்கள் செய்வார்கள். நாம் ஒன்றும் செய்யவில்லை அவர்கள் நம்மை கவனிக்கமாட்டார்கள்.

உங்களின் மனைவியாக இருக்கட்டும் அவர்களுக்கு நீங்கள் ஏதாவது செய்யாமல் இருந்தால் அவர்கள் கோபப்பட்டுவிடுவார்கள். உங்களின் பாடு திண்டாட்டம் தான். இயற்கையில் பெண்களுக்கு உள்ள குணம். அந்த குணம் கடவுளிடம் இருந்து தான் வந்தது.

உங்களின் ஊரில் உள்ள அம்மன் கோவில் எல்லாவற்றையும் பாருங்கள். அலங்காரம் அதிகம் செய்வார்கள். அதே நேரத்தில் சிவன் கோவிலை பாருங்கள் அவருக்கு ஒரு துண்டோடு விட்டுவிடுவார்கள். அது கூட அவருக்கு தேவையில்லை.சாம்பலை எடுத்து பூசிவிட்டு வணங்கி வந்துவிடலாம்.

நாம் அம்மனை அம்மாவாக தான் பார்க்கிறோம். அம்மனும் நம்மிடம் கேட்பதில்லை ஆனால் இயற்கையில் நாம் கொடுத்து பழகிவிட்டோம் அதனால் அழகாக வைத்து பார்க்க நினைக்கிறோம். நிறைய கொடுத்து நிறைய பெறுகிறோம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: