Followers

Wednesday, April 23, 2014

அதிர்ஷ்டம் வரும் வழி


வணக்கம் நண்பர்களே!
                    அதிர்ஷ்டம் வரும் வழியில் ஒரு கருத்தைப்பற்றி பார்க்கலாம். அதிகமாக நமது நண்பர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் கருத்தும் இதுவே.

உங்களின் வீடு மிகவும் முக்கியமான ஒன்று. வீடு சுத்தமாக இருக்கவேண்டும். அதே நேரத்தில் வீட்டில் வாசனை மணம் வரவேண்டும். அதோடு வீட்டில் அடிக்கடி பூஜைகள் செய்யப்படவேண்டும். தினமும் நீங்கள் உங்களின் வீட்டின் பூஜையறையில் பூஜை செய்தாலும் பெரிய அளவில் பூஜை செய்யும்பொழுது உங்களின் வீட்டிற்க்கு என்று ஒரு தெய்வீகசக்தி கிடைக்கும்.

நாள் முழுவதும் வெளியில் நீங்கள் வேலை செய்தாலும் உங்களை தயார்ப்படுத்திக்கொள்வது உங்களின் வீடு மட்டுமே. இரவு நேரத்தில் உங்களின் வீட்டின் வழியாக தான் உங்களுக்கு சக்தி கிடைக்கிறது. அப்படிப்பட்ட வீட்டின் மீது அதிக கவனம் செலுத்தவேண்டும்.

உங்களின் வீட்டில் வைத்து குலதெய்வத்திற்க்கு பச்சைப்பரப்புதல் செய்ய சொல்லிருக்கிறேன். அது குறைந்தது மூன்று மாதம் அல்லது மாதம் ஒரு முறை செய்யுங்கள் என்று சொல்லிள்ளேன். 

உங்களுக்கு அதிக அளவில் செல்வம் சேர வேண்டும் என்றால் மூன்று மாதத்திற்க்கு ஒரு முறை உங்களின் வீட்டில் நீங்கள் ஹோமம் செய்ய வேண்டும்.எந்த ஹோமம் வேண்டுமானாலும் செய்யலாம்.

சென்னையில் நான் தங்கியிருக்கும் அறைக்கு அருகில் ஒரு வீடு இருக்கிறது. மாதம்தோறும் அவர்களின் வீட்டில் ஹோமம் செய்வார்கள். அவர்களுக்கு என்று தனியாக ஒரு கம்பெனி இருக்கிறது. அந்த கம்பெனியின் சொத்து மதிப்பு ஆயிரம் கோடி ரூபாய். அந்த கம்பெனியின் பெயரை வெளியில் சொன்னால் உங்களுக்கு கூட தெரியும். வெளியில் சொல்லகூடாது என்பதால் சொல்லவில்லை. பெரிய பணக்காரர்களுக்கு இது தான் முதல் வேலையாக வைத்திருக்கிறார்கள். 

உங்களிடம் சொன்னால் எனக்கு நேரம் இல்லை என்று சொல்லுவீர்கள். என்ன செய்வது உங்களின் விதியை இப்படி எழுதியுள்ளான் கடவுள். செல்வம் வேண்டும் என்றால் செய்யுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Namakku 100kadavul irunthalum nampikkai vendume.