Followers

Sunday, April 20, 2014

தெரிந்ததை செய்கிறேன்


ணக்கம் ண்பர்களே!
                    என்னிடம் தொழில் வளர்ச்சிக்கு அல்லது தனிப்பட்ட வளர்ச்சிக்கு என்று ஆன்மீகத்திற்க்காக வருபவர்கள் என்னை சந்தித்து பேசும்பொழுது அவர்கள் பேசுவதை பார்க்கும்பொழுது ஆன்மீகத்தில் இவ்வளவு அறிவு வைத்துக்கொண்டு என்னை தேடி வருகின்றார்களே என்று தோன்றும்.

எங்கு எல்லாம் ஆன்மீக பதிவுகள் இருக்கின்றனவோ அனைத்தையும் தேடிபிடித்து படித்துவிட்டு ஒரு வரி விடாமல் பேசுபவர்களாக இருக்கின்றனர். அதனை என்னிடம் வந்து சந்தேகம் கேட்பார்கள். உண்மையில் சொல்லபோனால் எனக்கு பாடத்தின் அறிவு துளியும் இல்லாதவன்.

ஒரு சிலர் மாந்தீரிகத்தில் உள்ள விசயங்கள் எல்லாவற்றையும் கேட்பார்கள். எனக்கு இப்படி எல்லா இருக்கின்றதா என்று தோன்றும்.ஏட்டில் உள்ள படிப்பு வேலைக்கு ஆகாது.

என்னிடம் வந்தால் அம்மனை வைத்து வேலை வாங்குவேன். அது மட்டும் தான் எனக்கு தெரியும். உங்களுக்கு தேவையானதை செய்து தரும். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தாராளமாக சென்றுவிடலாம். யாரையும் நான் வற்புறுத்துதல் கிடையாது. அதே நேரத்தில் வருபவர்களுக்கும் தீங்கு செய்வதும் கிடையாது.எனக்கு தெரிந்ததை செய்து தருவேன். அதுவே உங்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சியை எட்ட முடியும். 

உங்களுக்கு தெரிந்தை வைத்து யார் இவன் என்று சோதனை செய்து பார்க்கலாம் என்று நினைத்தால் அது உங்களுக்கு எதிராக அமையவும் வாய்ப்பு இருக்கிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: