Followers

Saturday, April 19, 2014

குலதெய்வ வழிப்பாட்டை பரப்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    ஒவ்வொரு நாளும் எனக்கு புதிய புதிய நண்பர்கள் போன் செய்து இப்பொழுது தான் உங்களின் ஜாதககதம்பத்தை படிக்கிறேன். அதில் குலதெய்வத்திற்க்கு பச்சைப்பரப்புதலைப்பற்றி சொல்லியுள்ளீர்கள் அதனை படித்துவிட்டு நான் செய்தேன் என்று சொல்லுகிறார்கள். இதனை கேட்கும்பொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

நமது ஜாதககதம்பத்திற்க்கு வரும் நண்பர்கள் மட்டும் இல்லாமல் இதனை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு எல்லாம் சொல்லுங்கள். ஒவ்வொரு மனிதனும் தன் குலதெய்வத்தை விட்டு வெளி இடங்களுக்கு வந்து வேலை செய்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மனதில் ஆண்டுக்கொருமுறை மட்டுமே குலதெய்வ கோவிலுக்கு சென்று வரமுடிகிறது. வீட்டில் வணங்கமுடியவில்லையே என்று நினைக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் பச்சைப்பரப்புதல் என்பது மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதம்.அவர்கள் எல்லாம் தன் குலதெய்வத்தை வீட்டிலேயே வணங்கிக்கொள்கிறார்கள். அது அவர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கிறது.

இப்படிப்பட்ட சந்தோஷத்தில் நீங்களும் பங்குக்கொள்ள வேண்டும் அல்லவா. உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு எல்லாம் எப்படி செய்வது என்பதை கற்றுக்கொடுங்கள். இதனை ஜாதககதம்பத்தில் தான் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்பது எல்லாம் சொல்லதேவையில்லை. நீங்களே சொல்லிக்கொடுங்கள். நமக்கு விளம்பரம் தேவையில்லை. நல்லது நடந்தால் அதில் கிடைக்கும் மகிழ்ச்சி மிகப்பெரியது.

உடனே உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பியுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: