Followers

Sunday, April 13, 2014

நல்ல நாள்


வணக்கம் நண்பர்களே!
                    நாளை தமிழ்புத்தாண்டு. தமிழ்புத்தாண்டு தமிழர்களின் கையில் சிக்கி சின்னாபின்னாமாகி போனாலும் நாளைய தினம் ஒரு நல்ல நாளாகவே இருக்கும். தமிழ்புத்தாண்டில் ஆரம்பிக்கும் எந்த ஒரு செயலும் அது நன்மையிலேயே போய் முடியும். அதாவது சித்திரை முதல் தேதி அன்று ஆரம்பிக்கும் காரியம் வெற்றியை தருகிறது தரும்.

நாளைய தேதியில் எங்கு பார்த்தாலும் புதிய நிறுவனங்களை தொடங்குவார்கள். திராவிடகட்சியில் பிறந்தவர்கள் கூட நாளைய நாளை நன்றாக பயன்படுத்திக்கொண்டு அவர்களின் வியாபாரத்தை தொடங்குவார்கள். அப்படிபட்ட நல்ல நாள் சித்திரை முதல் நாள். நாளைய தினத்தை நீங்களும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

பொதுவாக வாத்தியார் பிள்ளை மக்கு என்ற பழமொழிக்கு ஏற்ப நன்றாக சோதிடம் தெரிந்தவர்கள் கூட நாளைய நாளை பயன்படுத்தாமல் விட்டுவிடுவார்கள். உங்களுக்கு தேவையான ஏதாவது ஒரு நல்ல செயலை நீங்கள் தொடங்கலாம். தமிழர் இல்லாதவர்கள் கூட நாளைய தினத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

நான் பழைய முறைப்படி தமிழ்புத்தாண்டை சித்திரை முதல் தேதி அன்று தான் கொண்டாடுகிறேன். நீங்கள் தமிழ்புத்தாண்டை தள்ளிவைத்தால் கூட நாளைய தினத்தை விட்டுவிடாதீர்கள். நல்லநாள் சென்றுவிட்டால் அப்புறம் மறுபடியும் வருவதற்க்குள் நாம் பலவற்றை இழந்துவிடுவோம்.

உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு நல்ல செயலை தொடங்குங்கள். பல வருடங்கள் அது உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். நான் அனுபத்தில் இதனை பார்த்து இருக்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


2 comments:

Vignesh L'Narayan said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

nallur parames said...

Aarampichiruvom