Followers

Saturday, April 19, 2014

காசு பணம் துட்டு


வணக்கம் நண்பர்களே!
                    நான் எவ்வளவோ பதிவுகள் எழுதியுள்ளேன் அதற்கு எல்லாம் கிடைக்காத ஒரு ரெஸ்பான்ஸ் நேற்று ஒரு பதிவுக்கு கிடைத்து இருக்கிறது. அதிர்ஷ்டம் வரும் வழி என்ற பதிவு தான் அது. அதனை எழுதிய நேரத்தில் இருந்து தொடர்ந்து போன் செய்துக்கொண்டே இருக்கிறார்கள். அதற்க்கான காரணம் என்ன என்றால் அவ்வளவு பணம் தட்டுபாட்டோடு மக்கள் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர் என்பது தெரிகிறது.

நாளுக்கு நாள் ஏறும் விலைவாசி ஒரு காரணமாக இருக்கிறது. நாளுக்கு நாள் விலைவாசி ஏறுவது போல் மக்களின் சம்பாதித்தியம் ஏறவில்லை என்று தெரிகிறது. வருடத்திற்க்கு ஆயிரம் ரூபாய் ஏறினாலே மிகப்பெரிய விசயம். 

ஒரு இல்லறத்தார்க்கு பணப்பற்றாக்குறை மட்டும் ஏற்பட்டால் அது மிகப்பெரிய சிக்கலை உருவாக்கிவிடும். ஒரு சிலர் சொல்லுவார்கள் மக்கள் ஆடம்பரமாக வாழநினைக்கிறார்கள் அதனால் அவர்களுக்கு பணப்பற்றாக்குறை ஏற்படுகிறது என்பார்கள். அதனை எல்லாம் நான் ஏற்றுக்கொள்வதில்லை. ஏன் என்றால் ஒவ்வொரு மனிதனும் அவனுக்கு தகுந்த சம்பளத்தில் எப்படி வாழவேண்டும் என்று திட்டம் போட்டு தான் வாழ்கிறான். ஒரு சிலர் ஆடம்பரம் வாழ்விற்க்காக அனைத்தையும் இழந்தாலும் பெரும்பாலும் மக்கள் நல்லவழியில் தான் வாழ்க்கிறார்கள்.

உலகத்தில் பிறந்த விட்டோம் அது நமது தவறு இல்லை. இயற்கையின் செயல். வந்துவிட்டோம் இங்கு இருக்கும் நிலைக்கு தகுந்தவாறு நம்மை தயார்படுத்திக்கொண்டு வாழவேண்டியது தான்.

பொதுவாக நான் கொடுக்கும் விசயங்களை நீங்கள் பின்பற்றினாலே போதும் உங்களின் வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்திற்க்கு நீங்கள் செல்லமுடியும். என்ன என்றால் அதனை கடைபிடிக்க வேண்டும். கடைபிடிக்காமல் எனக்கு கிடைக்கவில்லை என்றால் நான் ஒன்றும் செய்யமுடியாது.

மிக எளிமையான வழிமுறைகளை நான் சொல்லுவேன். அதனை எல்லாம் நீங்கள் கடைபிடிக்கும்பொழுது உங்களுக்கு மாற்றம் வரும். அதே நேரத்தில் உங்களின் புத்தியையும் கொஞ்சம் பயன்படுத்தினால் போதும். நீங்கள் உயர்ந்துவிடலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: