Followers

Monday, April 21, 2014

அன்பான அறிவிப்பு


வணக்கம் நண்பர்களே!
                    இந்த வாரத்தில் இருந்து யாரையும் சந்திப்பதில்லை என்று முடிவு எடுத்து இருக்கிறேன். தனிப்பட்ட வேலை காரணமாக வெளியில் இருந்து வரும் நண்பர்களை சந்திக்கமுடிவதில்லை. அனைவரும் எனது போனில் தொடர்புக்கொண்டு உங்களின் சோதிடப்பலனை கேட்டுக்கொள்ளுங்கள்.

எனது அறையில் இருந்து தன்னை மேம்படுத்திக்கொள்ள ஒரு சில பயிற்சிகள் செய்யவேண்டி உள்ளது. அதற்கு தனியாக தான் இருக்கவேண்டும் என்ற காரணத்தால் இந்த முடிவை எடுத்துள்ளேன்.

போனில் தொடர்புக்கொண்டு பேசும்பொழுது எனக்கு ஒன்றும் பெரிய பிரச்சினை வராது. அனைவரிடமும் நான் பேசமுடியும். என்னை சந்திக்கவேண்டும் என்று விரும்பி வரும்பொழுது அதற்கு என்று அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. அன்றைய நாள் முழுவதும் சென்றுவிடும் என்பதால் இந்த முடிவு எடுத்துள்ளேன். புதிய அலுவலகத்திற்க்கு கூட நான் செல்வதில்லை. எனது அறையில் இருந்து தான் பதிவுகளை தந்துக்கொண்டு இருக்கிறேன்.

நேரம் வரும்பொழுது பதிவில் சொல்லுகிறேன். அப்பொழுது வந்து என்னை சந்திக்கொள்ளலாம். யாரும் கோபப்படவேண்டாம் கொஞ்ச நாளில் அனைத்தையும் தயார் செய்துவிட்டு உங்களை சந்திக்கிறேன். அனைவரும் போன் அல்லது ஈமெயிலில் தொடர்புக்கொள்ளவும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: