Followers

Saturday, April 19, 2014

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    அம்மன் ஒருவரிடம் வருகிறது என்றால் அதுவும் பிரச்சினை கொடுப்பதுபோல் செல்லுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவர்களுக்கு என்று தனியான ஒரு சில விசயங்களை செய்யும். 

சம்பந்தப்பட்ட நபர் விடிய விடிய தூக்கம் என்பது வரவே வராது. அவர்கள் தூக்கமாத்திரை போட்டுக்கொண்டு தூங்கினால் கூட தூக்கம் என்பது வராது. அப்பொழுதே தெரிந்துக்கொள்ளலாம். நாம் அம்மனுக்கு ஏதோ தீங்கு நினைத்து இருக்கிறோம் என்று புரியும். தீங்கு என்றால் தவறாக பேசியுள்ளோம் என்பது தெரிந்துக்கொள்ளலாம்.

தூக்கத்தை தொடர்ந்து கெடுக்கும்பொழுது உங்களுக்கு எளிதில் பைத்தியம் பிடித்துவிடும். அம்மன் முதல் குணமே இப்படி பைத்தியத்தை கொடுப்பது மட்டுமே. பொதுவாக நான் யாருக்கும் தீங்கு செய்வதில்லை. அம்மனிடம் ஏமாற்றுதல் செய்யும்பொழுது இப்படி செய்கிறது.

இதற்கு தீர்வு என்ன என்று கேட்டால் என்ன விசயத்தில் நாம் ஏமாற்றினோம் என்று பார்த்து அதனை சரிசெய்துக்கொள்வது நல்லது. அதுவும் நமது அம்மன் இந்த விசயத்தில் தான் எனக்கு தெரிந்து முதலாவதாக செய்யும் செயல்.

இயற்கையாகவே ஒரு சிலர் இரவில் சாப்பிடாமல் இருந்தால் தூக்கம் வராது. உடனே அம்மன் ஏதாே செய்துவிட்டது என்று நினைக்கவேண்டாம். குற்றம் உள்ள மனதிற்க்கு அது உடனே தெரியும். மீதி உள்ளவர்கள் இதனைப்பற்றி அலட்டிக்கொள்ளவேண்டாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: