Followers

Tuesday, April 8, 2014

மனதால் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                    எனக்கு இப்பொழுது பொருளாதார நிலை ஒரளவு நன்றாக இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். சென்ற வருடத்திற்க்கு இந்த வருடம் நன்றாக இருக்கிறது என்று சொல்லுவோம் அல்லவா அப்படி இருக்கிறது. பணத்தின் மீது உள்ள வெறி அடங்கவில்லை அதற்க்கு பல காரணங்கள் இருக்கின்றது. ஏன் பணத்தின் மீது இப்படி ஒரு எண்ணம் வந்தது என்பதற்க்கு பல காரணங்கள் இருக்கின்றன. பதிவுகள் சொல்லவேண்டிய காலத்தில் அதனைப்பற்றி சொல்லிவிடுகிறேன். 

நான் ஆன்மீகம் கற்ற நேரத்தில் எப்படி இருந்தேன் என்பது உங்களுக்கு சொல்லவேண்டியதில்லை அதனைப்பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். அந்த நேரத்தில் எல்லாம் இன்றைக்கு அம்மனுக்கு செய்யும் பூஜைகளை எல்லாம் நான் வெளியில் செய்தது கிடையாது. பூ கூட வாங்கி வந்து போட்டது கிடையாது. விளக்கை ஏற்றியது கிடையாது. அப்படி இருந்தும் நான் அம்மனை எடுத்தேன். 

எப்படி பூஜை செய்தேன் என்பதை இப்பொழுது சொல்லுகிறேன் பாருங்கள். என் மனதால் மாலை போடுவேன். என் மனதால் அழங்காரம் செய்வேன். என் மனதால் ஊதுவத்தி ஏற்றுவேன். என் மனதால் தீபாராதனை காட்டுவேன். என் மனதால் பிரம்மாண்டமாக பூஜை செய்வது போல் செய்வேன். இது தான் அம்மன் என்னிடம் வருவதற்க்கு காரணம்.

மனதில் நல்ல எண்ணங்களை வைத்து இப்படி செய்தாலே போதும் உங்களிடம் அனைத்தும் கடவுளும் ஒடி வரும். மனதில் நல்ல எண்ணங்கள் இல்லை என்றால் இப்படி எல்லாம் செய்யமுடியாது..

நமது அம்மன் கோவிலின் படம் உங்களிடம் இருக்கும் அல்லது நமது பதிவில் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களின் மனதால் அதனை அலங்காரம் செய்து பூஜை செய்வது போல் செய்யுங்கள். உங்களுக்கு அம்மன் அனைத்தையும் கொடுக்கும். செய்து பார்த்தவிட்டு சொல்லுங்கள். காசா பணமா மனதால் செய்யுங்கள் தினந்தோறும் செய்யுங்கள். அனைத்திலும் முன்னேற்றம் அடைந்துவிடலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Naanum en perumalukku adikkadi ippadi poojai seyven.avar uchi mudhal padham varai ney,pal,pannir,thayir apisekam seythu thulasi.semparuthi,arali ellam alangaaram seyven.