Followers

Saturday, April 19, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு சில நண்பர்களை நான் சந்திக்கும்பொழுது அவர்கள் சார் நீங்கள் தொழில் செய்பவர்களுக்கு மட்டுமே ஆன்மீகவழியில் செய்துக்கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள் எங்களை போல் உள்ளவர்களுக்கும் செய்யலாமே என்று கேட்பார்கள்.

அனைவருக்கும் செய்துக்கொடுத்துக்கொண்டு தான் இருந்தேன். இடையில் கொஞ்சம் பொருளாதார வழியில் நெருக்கடி ஏற்படும்பொழுது முழுவதும் தொழில் செய்பவர்களுக்கு என்று கவனம் செலுத்தினால் மட்டுமே இதனை எல்லாம் சமாளிக்கமுடியும்.

உங்களுக்கு எல்லாம் மாதம் பிறந்தால் சம்பளம் கிடைத்துவிடும். எங்களுக்கு அப்படி இல்லை. மாதம் பிறந்தால் செலவு தான் ஆகும். அதனால் பொருளாதார வழியில் முன்னேற்றம் வேண்டும் என்பதால் தொழில் செய்பவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உதவி செய்துக்கொண்டு வருகிறேன்.

தனிநபர்க்கு செய்யும்பொழுது அவர்களிடம் இருந்து பெறுகின்ற பணம் மிகவும் குறைவு. அதே சக்தியை தொழில் செய்பவர்களுக்கு என்று நான் போடும்பொழுது எனக்கு பல மடங்கு வருவாய் வரும். பத்து பேருக்கு தனிநபராக செய்யும் விசயம் ஒரு வேலையில் தொழில் செய்பவர்களிடம் இருந்து வந்துவிடும். அதனை வைத்து நான் பல பேருக்கு நல்லது செய்ய முடியும் அல்லவா அதனால் அப்படி எடுக்கிறேன்.

தனிநபருக்கு என்று பல விசயங்களை பதிவிலேயே சொல்லிக்கொண்டு வருகிறேன். அதனை எல்லாம் கடைபிடித்தால் அனைவரும் நல்ல மாற்றங்களை காணமுடியும். தனிநபர் வரக்கூடாது என்பது அல்ல. அவர்கள் வருவது தவறு இல்லை. அதற்கு தகுந்த பணத்தை கட்டவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: