Followers

Friday, April 18, 2014

பணம் பணத்தோடு இனம் இனத்தோடு


வணக்கம் நண்பர்களே!
                    சுக்கிரனின் பரிகாரத்தில் மால்களைப்பற்றி சொல்லிருந்தேன் அதனை பற்றி விளக்கி சொல்லமுடியுமா என்று ஒரு நண்பர் கேட்டார். அவரின் கேள்விக்கு பதில்.

மால்கள் மற்றும் சொகுசுனா இடங்கள் அனைத்தும் சுக்கிரன் காரகம் வகிக்கும் இடங்கள் ஆகும். இந்த இடத்திற்க்கு நாம் சென்றால் சுக்கிரனின் காரத்துவம் நமக்கு கிடைக்கும் என்ற வகையில் நான் அதில் எழுதினேன்.

மேலே சொன்ன இடங்களுக்கு எல்லாம் பொதுவாக நல்ல வசதிப்படைத்தவர்கள் வருவார்கள். அவர்களின் எண்ணங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருக்கும். மகிழ்ச்சியாக இருப்பதற்க்கு இத்தகைய இடங்களுக்கு வருகிறார்கள் மக்கள். நல்ல எண்ணங்களோடு மனிதர்கள் ஒரு இடத்தில் கூடும்பொழுது அந்த எண்ணங்கள் நமது மனதிற்க்கு ஒரு நல்ல சக்தியை கொடுக்கிறது.

இந்த எண்ணங்களை பெறுவதற்க்கு தான் உங்களை அங்கு செல்ல சொல்லிருந்தேன். மால்களுக்கும் எனக்கும் எந்த வித லிங்க்கும் கிடையாது. பணக்காரர்களோடு சேரும்பொழுது நமக்கு பணத்தைப்பற்றிய எண்ணம் வரும் அல்லது அவர்களின் உதவியாவது கிடைக்கும். பணம் பணத்தோடு சேரும் இனம் இனத்தோடு சேரும் என்று சொல்லுவார்கள் அல்லவா.

இதனை எல்லாம் மனதில் வைத்து தான் அந்த இடத்திற்க்கு போகும்பொழுது நமக்கு சுக்கிரனின் சக்தி கிடைக்கும் என்று சொன்னேன். இப்பொழுது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: