Followers

Tuesday, April 29, 2014

வீடு கட்ட பரிகாரம்


ணக்கம் ண்பர்களே!
                    ஒவ்வொரு மனிதனுக்கும் தனியாக ஒரு வீடு கட்டவேண்டும் என்ற ஆவல் இருக்கும். ஒரு சிலருக்கு வீடு அமைந்துவிடும் ஒரு சிலர் என்ன தான் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு வீடு கட்டும் பாக்கியம் கிடைக்காது. பணம் இருந்தால் கூட அவர்களுக்கு வீடு கட்டும் பாக்கியம் கிடைப்பதில்லை. 

ஜாதகத்தில் நான்காவது வீடு நமக்கு அமையும் வீட்டை காட்டும் இடமாகும். நான்காவது வீடு நன்றாக இருந்தால் எப்படியும் ஒரு வீடு கிடைத்துவிடும். நான்காவது வீடு கெட்டால் வீடு அமையாது. இன்றைய காலகட்டத்தில் அத்தியவாசிய தேவைக்களில் வீடும் வந்துவிட்டது. வீட்டிற்க்காக ஆசைப்படுபவர்களுக்கு ஒரு பரிகாரத்தை சொல்லுகிறேன். செய்துபாருங்கள்.

உங்களின் ஜாதகத்தில் நான்காவது வீட்டு அதிபதி யார் என்று பார்த்துவிட்டு அவருக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு வியாழக்கிழமை தோறும் குரு பகவான் அல்லது தெஷ்ணாமூர்த்தி சந்நிதியில் அரச இலையின் மேல் நான்கு தீபத்தை வைத்து ஏற்றி வழிப்பட்டு வாருங்கள். ஒன்பது வாரம் செய்யவேண்டும். இப்படி செய்து வந்தால் உங்களுக்கு அழகான வீடு கட்டமுடியும்.

எனது நண்பர் ஒருவர் நான் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தால். அவர் சொன்னார் ஜாலியாகவும் இருக்கவேண்டும் அதே நேரத்தில் ஆன்மீகத்தையும் பின்பற்றி வரவேண்டும் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள் என்றார்.  இதுவரை எனக்கு பின்னோட்டம் இடுபவர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வட்டம் மட்டும் பதிலை தந்துள்ளார்கள்.மீதி உள்ளவர்கள் பதிலை இதுவரை தரவில்லை.அனைவரிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

raagavans said...

வணக்கம் உங்கள் தள வாசகர்களில் நானும் ஒருவர் உங்கள் பரிகார முறை எங்கள் ஆவலை செய்யத்தூண்டுகிறது ஆனால் வெளிநாட்டில் உள்ள எங்களை போன்றவர்கள் ஒரு சில சிக்கல்களுக்கு எவ்வாறு தீர்வு காண்பது (உ ம் அரச இலை இங்கு இல்லை ஆனால் விளக்கு ஏற்றி அபிஷேகம் செய்ய கோவில் உண்டு) பணிவுடன் சுதாகர்