Followers

Friday, April 18, 2014

அதிர்ஷ்டம் வரும் வழி


ணக்கம் ண்பர்களே!
                     நான் எவ்வளவு தான் சொன்னாலும் அதனை பின்பற்றி வருபவர்கள் மிக குறைவு ஏன் என்றால் ஒவ்வொரு மனிதனுக்கும் அப்படி ஒரு சோம்பல் ஆட்கொண்டு வருகிறது. கிரகங்களால் வரும் வீழ்ச்சியை விட நாம் செய்யாமல் விட்ட நல்ல விசயங்களால் அதிகம் நமக்கு வீழ்ச்சி வருகிறது.

மனிதனின் மனம் உடனே கிடைக்கவேண்டும் அதே நேரத்தில் எளிமையாக நமக்கு கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கடவுள் விசயத்தில் அவ்வளவு எளிதில் ஒன்று கிடைத்துவிட்டால் அப்புறம் மனிதன் கடவுளை மதிக்கமாட்டான். கடவுள் சம்பந்தப்பட்ட விசயங்கள் அனைத்தும் கஷ்டப்பட்டு தான் எடுக்கவேண்டும்.

மனிதன் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து மண்ணில் உருண்டாலும்  ஒட்டிகிற மண் தான் ஒட்டும் என்று பழமொழி சொல்லுவார்கள். அதாவது அதிர்ஷ்டம் இருந்தால் தான் மண் கூட உன் உடலில் ஒட்டும் என்பார்கள். அந்தளவுக்கு அதிர்ஷ்டத்தை நம் ஆட்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

சோதிடத்தில் நமக்கு வரும் அதிர்ஷ்டத்தை நான்காவது வீட்டைக்கொண்டு அறியலாம். நான்காவது வீடு நன்றாக இருந்தால் நமக்கு நல்ல அதிர்ஷ்டம் வரும் . நம்ம ஆட்கள் அதற்க்கும் ஒரு பரிகாரம் இல்லாமலா விட்டு வைப்பார்கள். அதனை சொல்லுகிறேன். 

உங்களுக்கு அதிர்ஷ்டம் வேண்டும் என்றால் நான்காவது வீட்டு அதிபதியை அல்லது நான்காவது வீட்டில் இருக்கும் கிரகத்தை நீங்கள் வணங்கினால் உங்களுக்கு அதிர்ஷ்டம் வரும்.

நான் சொல்லிவிட்டேன். நீங்கள் வழிப்பட்டு அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ளுங்கள். சும்மா ஒரு நாள் வணங்கிவிட்டு எனக்கு அதிர்ஷ்டம் வரவில்லை எ்ன்று போன் செய்யாதீர்கள். 


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Haiya enakku 4l sukkiran uchcham guru vin parvai veru ulladhu jali jali.