Followers

Monday, April 21, 2014

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    நம்பினால் நம்புங்கள் பகுதியில் ஒரு சுவாராசியமான ஒரு தகவலைப்பற்றி பார்க்கலாம். நாம் ஒவ்வொரு கோவிலாக சுற்றி அலைவோம். அந்தந்த தெய்வங்களை தரிசனம் செய்வதற்க்கு ஊர் ஊராக சென்று வருவோம். நீங்கள் ஒரு ஆன்மீகவாதியாக இருந்தால் கண்டிப்பாக இப்படி அலையவேண்டியதில்லை.

உங்களை தேடி அனைத்து தெய்வங்களும் வரும். உங்களுக்கு தரிசனம் தரும். அதுவே உங்களுக்கு போதும். இந்த பிறவி நமக்கு மிகப்பெரிய பாக்கியம் கிடைத்து இருக்கிறது என்று நினைத்துக்கொள்ளலாம். நான் பல கோவில்களை இப்படி தான் பார்த்து இருக்கிறேன். பொதுவாக நான் அதிகம் கோவிலுக்கு எல்லாம் இப்பொழுது செல்வதில்லை. அனைத்தும் இப்படி தான் தரிசனம் செய்கிறேன்.

ஒரு சில கோவிலுக்கு மட்டும் செல்வது உண்டு. அதுவும் எனது மனம் விருப்பட்டால் செல்வது உண்டு. இப்படி நீங்கள் வீட்டிலேயே இருந்து தரிசனம் செய்வதற்க்கு நீங்கள பல பிறவிகள் முயற்சி செய்து இந்த பிறவியில் உங்களுக்கு கிடைத்து இருக்கிறது என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு இப்படி தெரியவில்லை என்றால் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்து பாருங்கள். விரைவில் உங்களுக்கு தரிசனம் கிடைக்கும். நம்பினால் நம்புங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: