Followers

Sunday, May 11, 2014

விரைய தசா பகுதி 10


வணக்கம் நண்பர்களே!
                         இன்று காலையிலேயே மேல்மலையனூர் அம்மனை தரிசனம் செய்வதற்க்கு ஒரு வாய்ப்பு வந்தது ஆனால் அதற்கு செல்லமுடியவில்லை இடையில் ஒரு சில முக்கிய வேலை வந்துவிட்டது. முக்கிய வேலையின் இடையில் உங்களுக்கு பதிவையும் கொடுத்துவிடவேண்டும் என்று அமர்ந்து பதிவை கொடுக்கிறேன்.
                    
விரைய தசாவில் ஒரு கருத்தை பார்க்கலாம். எனக்கு தெரிந்த ஒரு நண்பர் இருந்தார். அவருக்கு செவ்வாய் பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்து இருந்தார். அவர் ரியல் எஸ்டேட் தொழிலை விரும்பி செய்து வந்தார். நான் அவரிடம் முடிந்தளவு இந்த தொழிலை விட்டுவிட்டு சென்றுவிடுங்கள் அல்லது தொழிலுக்கு என்று மூதலீடு செய்யாதீர்கள் என்று சொல்லிருந்தேன்.

அவர் நான் சொன்னதைப்பற்றி கவலைப்படவில்லை. நன்றாக பணம் வருகிறது எதற்கு இதனை நான் விட்டுவிட்டு அடுத்த தொழிலை செய்யவேண்டும் என்று பிடிவாதத்தில் இருந்தார். சரி செய்யுங்கள் ஆனால் எந்த ஒரு காரணத்திற்க்காகவும் நிலத்தில் மூதலீடு செய்யாதீர்கள் என்று சொல்லிருந்தேன். சரி என்று சொன்னார். அவரை விதி விளையாடாமல் விடுமா என்ன?

எங்கேயே சென்று ஒரு நிலத்தில் மூதலீடு செய்துவிட்டார். அந்த நிலத்தில் ஏகாப்பட்ட பிரச்சினை இருந்திருக்கிறது. அதன் விவரங்களைப்பற்றி தெரியாமல் சென்றுவிட்டார் என்று நினைக்கிறேன்.செவ்வாய் கிரகம் தான் கொண்டு சென்றுவிட்டதா என்று தெரியவில்லை. 

மிகப்பெரிய விரையத்தை அதில் சந்தித்தார். சேமித்த பணம் முழுவதும் அதில் இழந்தார். மிகப்பெரிய நஷ்டத்தோடு இருக்கிறார். எந்த ஒரு கிரகமும் முதலில் ஆசையை காட்டும் அதற்குள் சென்ற பிறகு நமக்கு மிகப்பெரிய விரையத்தை உருவாக்கிவிடும்.

செவ்வாய் பனிரெண்டில் அமரும்பொழுது மிகப்பெரிய அளவில் தான் விரையத்தை உண்டுபண்ணும் அல்லது பெரிய விபத்தை உருவாக்கிவிடும். செவ்வாய் கிரகத்தின் காரத்துவம் அப்படிப்பட்டது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

nallur parames said...

Sevvai kirakathai cool seyya enna vali?

Unknown said...

வணக்கம் அய்யா

செவ்வாய் ஆட்சி, உச்சம், பரிவர்த்தனை, ஒரு மறைவு ஸ்தானத்திற்கு அதிபதியாகி இன்னொரு துஷ்டனோடு சேர்ந்திருந்தாலும் மற்றும் சுப கிரக சேர்க்கை பார்வை பெற்றாலும் அதே பலன்தானா.

நன்றி
செல்வம்