Followers

Monday, May 19, 2014

விரைய தசா பகுதி 13


வணக்கம் நண்பர்களே!
                    விரைய தசாவில் ஒரு தகவலை பார்க்கலாம். ஒரு வாடிக்கையாளருக்கு பனிரெண்டாவது வீட்டில் ராகு அமர்ந்து இருந்தது. ராகுவோடு ஏழாவது வீட்டு அதிபதியும் சேர்ந்து இருந்தது. அவர் தஞ்சாவூர் பகுதியில் வசித்துவந்தார். வெளிநாடு சென்று வேலை செய்தார்.

அவர் திருமணம் ஆகாதவர். வெளிநாட்டில் அவர் வேலை செய்யும்பொழுது அங்குள்ள பெண்ணை திருமணம் செய்தார். இருவரும் அங்கேயே வாழ்ந்து வந்தனர். இருவரும் திருமண வாழ்வில் பிரச்சினை உருவாக்கும் விதமாக அவர்களின் வாழ்க்கையில் பிரச்சினை உருவாக்கியது ராகு கிரகம்.

நாம் திருமண வாழ்வில் விவாகாரத்து வாங்குவதை ஆறாவது வீட்டை மட்டும் வைத்து தீர்மானித்துக்கொண்டு இருப்போம் ஆனால் பனிரெண்டாவது வீட்டில் உள்ள கிரகங்களும் விவாகாரத்தை பெற்று தரும் என்பதற்க்கு இவர்களின் வாழ்க்கையே ஒரு உண்மை என்று எடுத்துக்கொள்ளலாம்.

அந்த நாட்டில் எளிதாக பெறக்கூடியது விவாகாரத்து மட்டும் தான் என்று நண்பர் சொன்ன பிறகு தான் எனக்கு தெரிந்தது. அந்த பெண்ணே சென்று விவாகாரத்தை பெற்றுவிட்டது என்று சொன்னார். அதனால் மிகவும் நண்பர் கவலைப்பட்டுவிட்டார்.என்னிடம் போனில் சொல்லி அழுதுவிட்டார்.

விரைய தசா நடைபெற்றால் நாம் தான் கொஞ்சம் எடுக்கும் முடிவை ஆலோசித்து முடிவு எடுக்கவேண்டும்.அப்படி முடிவு எடுக்கவில்லை என்றால் பிரச்சினையில் தான் சிக்குவோம்.

ஏழாவது வீட்டு அதிபதி பனிரெண்டில் ராகுவோடு சேர்ந்து இருந்ததால் வெளிநாட்டில் திருமணம் ஆனது ஆனால் பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்த ராகுவின் தசாவால் திருமணம் விரையம் ஆனாது.விரைய தசா என்பது எந்தவிதத்திலாவது நமக்கு விரையத்தை கொடுத்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: