Followers

Friday, May 23, 2014

விரைய தசா பகுதி 15


வணக்கம் நண்பர்களே!
                    விரைய தசாவில் ஒரு அனுபவத்தை சொல்லுகிறேன். படித்து பாருங்கள். ஒரு நபர் சோதிடம் பார்க்க வந்தார். அவரின் ஜாதகத்தில் விரைய வீட்டில் புதன் அமர்ந்து இருந்தது. புதனோடு சூரியனும் சேர்ந்து அமர்ந்து இருந்தது. இவருக்கு திருமணம் நடைபெற்றது.

இப்பொழுது எல்லாம் திருமணம் நடந்தால் பெண்களின் நினைப்பு என்ன என்றால் அந்த பையன் வீட்டில் உள்ளவர்களோடு தொடர்பு வைத்துக்கொள்ளகூடாது என்று நினைக்கிறார்கள். வரும் கணவன் தன் பேச்சை மட்டும் தான் கேட்க வேண்டும் என்று நினைக்கின்றனர். சொந்த வீட்டில் வீட்டில் இருந்து பிரித்து எடுத்துக்கொண்டு சென்றுவிடுகின்றனர்.

இதனை எல்லாம் காலத்தின் கோலம் தான் சொல்லவேண்டுமே தவிர வேறு ஒன்றும் கிடையாது. இவரின் மனைவியும் இவரை தன் வீட்டோடு இருக்க வேண்டும் நீங்கள் வந்துவிடவேண்டும் என்று சொல்லியுள்ளார்கள். பையன் முடியாது என்று சொன்னவுடன் ஏகாப்பட்ட பிரச்சினை உருவாக்கிவிட்டது அந்த பெண்.

பையனின் வீட்டில் சொத்து இருந்தால் அந்த வீட்டில் உள்ளவர்களை துரத்திவிடவேண்டும் என்று நினைப்பார்கள். அதனாலேயே வீட்டில் பிரச்சினையை கிளப்பிவிடுவார்கள். பையனின் வீட்டில் சொத்து இல்லை என்றால் அந்த பையனின் சம்பளத்தை முழுவதும் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்து பிரித்து கூட்டிக்கொண்டு சென்றுவிடுவார்கள்.

இவரின் வீட்டில் சொத்து இல்லை பையனை பெண்ணின் வீட்டிற்க்கு வா என்று சொல்லி வற்புறுத்தியுள்ளார். பையன் முடியாது என்று சொன்னவுடன் பெண்ணின் தந்தை வந்து அவரும் பிரச்சினையை கிளப்பிவிட்டார். புதன் மாமனுக்கு காரகம் வகிக்கிறார். புதனின் தசாவில் இவர் பிரச்சினையை சந்திக்கிறார். விளைவு பஞ்சாயத்து வரை சென்று இருக்கிறது. பஞ்சாயத்து செய்தும் ஒன்றும் பிரச்சினை தீரவில்லை.

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விவாகரத்து கேட்டுவிட்டது அந்த பெண். இப்படி எல்லாம் நடக்குமா என்று நினைக்காதீர்கள். இதைவிட பெரிய அளவில் எல்லாம் பிரச்சினை நடக்கிறது. கோர்ட்டிற்க்கும் வீட்டிற்க்கும் இழுத்து அடித்து இவரை உண்டு இல்லை என்று செய்துவிட்டது அந்த பெண்.

திருமண வாழ்க்கையே வேண்டாம் பா என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். இந்த பிரச்சினைக்கு முதல் காரணமாக அந்த பெண்ணின் தந்தையை தான் சொல்லவேண்டும். அவர் தான் பெரிய அளவில் பிரச்சினையை உருவாக்கிவிட்டார். புதன் பனிரெண்டில் இருந்து தசா நடந்தால் திருமணம் நடந்து இருந்தால் பெண்ணின் தந்தை வழியாக மிகப்பெரிய இழப்பை சந்திக்கவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: