Followers

Saturday, May 24, 2014

ஆன்மீக அனுபவங்கள் 162


வணக்கம் நண்பர்களே!
                    ஆன்மீக அனுபவங்களை பார்த்து நீண்ட நாள்களாகவிட்டது. இன்று பார்த்துவிடலாம். மனிதனின் எண்ணங்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று சொல்லுவது உண்டு. உங்களின் எண்ணங்களை பற்றி தெரிந்துக்கொள்ள ஒரு வழியை நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன். அதைப்பற்றி மறுமுறை சொல்லி மேலும் ஒரு தகவலையும் தருகிறேன்.

உங்களின் வீட்டில் நாய் இருந்தால் அதனை நீங்கள் பார்க்காமல் உங்களின் மனதில் அந்த நாயை இப்பொழுது அடிக்கபோகிறேன். அந்த நாயை கொல்லபோகிறேன் என்று உங்களின் மனதில் கோபத்தை காட்டுங்கள். அந்த நாயை பார்க்காமல் சொல்லிபாருங்கள். அந்த நாள் உங்களை பார்த்து குரைக்க ஆரம்பித்துவிடும். இதில் இருந்து என்ன தோன்றுகிறது என்றால் உங்களின் எண்ணங்கள் அந்த நாயை சென்று தாக்குகிறது. உங்களுக்கும் அந்த நாய்க்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை ஆனால் நாய் உங்களைப்பார்த்து குரைக்க ஆரம்பிக்கிறது. இது தான் எண்ணங்களின் சக்தி.

இந்த எண்ணங்களை மேம்படுத்த மேம்படுத்த அது இந்த பிரபஞ்சம் முழுவதும் செல்லுகிறது. நான் சென்னையில் அமர்ந்து இந்த எண்ணங்களை அமெரிக்காவில் உள்ளவனுக்கு அனுப்பமுடியும். ஏன் இந்த பிரபஞ்சம் முழுவதும் அனுப்பமுடியும். இதனை தான் நான் செய்துக்கொண்டு இருப்பேன். 

உங்களின் எண்ணங்கள் ஒரு குறுகிய எல்லைக்குள் மட்டுமே இருக்கும். அதனை நீங்கள் மேம்படுத்தி மேம்படுத்தி வெளி எல்லைகளுக்கும் அனுப்ப ஆரம்பித்தால் நீங்களும் பெரிய சக்தி படைத்த ஆள். உங்களின் ஆத்மசக்தியை மேம்படுத்த மேம்படுத்த இந்த எண்ணங்களை பரப்பும் சக்தி அதிகரிக்கும். காயத்ரி மந்திரம் ஜெபிக்க ஜெபிக்க உங்களின் ஆத்மா பலம் பெறும். உங்களின் எண்ணங்களை எளிதில் கடத்தமுடியும்.

காயத்ரி மந்திரம் ஜெபிக்காமல் கூட இதனை நீங்கள் செய்திருப்பீர்கள். நீங்கள் காதலில் விழுந்திருந்தால் உங்களின் காதலியை நினைக்கும்பொழுது உங்களின் காதலி உங்களுக்கு போன் செய்து பேசி இருப்பாள். இது எல்லாம் நடப்பது உங்களின் ஆத்மாவின் சக்தியால் என்பதை அப்பொழுது உணர்ந்திருக்கமாட்டீர்கள். 

காதலுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அடுத்தவிசயத்தில் நீங்கள் கொடுப்பதில்லை. உண்மையில் அனைத்து விசயத்திலும் நீங்கள் முக்கியதுவம் கொடுத்தால் இது எல்லாம் உங்களுக்கு எளிதில் நடைபெறும். பயிற்சி செய்யவேண்டிய ஒரு விசயத்தை கடவுள் இயற்கையாக நமக்கு கொடுக்கிறார். நாம் உணரும் நிலையில் இருப்பதில்லை. உடனே நீங்கள் ஆத்மாவின் சக்தியை மேம்படுத்த ஆரம்பியுங்கள். 

உலகத்தில் உள்ள சக்திகளிலேயே உங்களின் ஆத்மா தான் மிகப்பெரிய சக்தி வாய்ந்த ஒன்று அதற்கு பிறகு தான் அனைத்தும் என்பதை முதலில் உணர்ந்தால் போதும். 

பிரபஞ்சம் முழுவதும் தேடிப்பார்த்தாலும் உங்களின் ஆத்மாவிற்க்கு ஈடு வேறு ஒன்றும் கிடையாது. என்ன அதனை நீங்கள் உணர்வது கிடையாது. உணர்ந்தால் போதும். நான் சொன்ன விசயத்தை கடைபிடித்து பாருங்கள் அப்பொழுது நான் சொல்லுவது உண்மை என்று தெரியவரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: