Followers

Monday, May 26, 2014

ஆன்மீக அனுபவங்கள் 163


வணக்கம் நண்பர்களே!
                    பெரும்பாலும் அனைவருக்கும் பணக்காரர் ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கும். அதனை நோக்கி முக்கால்வாசி பேர் ஓடிக்கொண்டு இருப்பார்கள். இதில் யார் வெற்றி அடைகிறார்கள் என்பது அவர்களின் முயற்சி மற்றும் அவர்கள் செய்த புண்ணியத்தை பொருத்த விசயம் என்று சொல்லுவோம். இதனை மீறி ஒரு செயல் ஒன்று இருப்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

உங்களின் ஆத்மாவில் அனைத்து விசயங்களும் படிந்து இருக்கலாம். உங்களின் முன்னோர்களின் ஆத்மா உங்களுக்கு உதவி புரியவேண்டும். பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையுடன் உங்களின் முன்னோர் ஒருவர் இருந்து அவர் முயற்சி எடுத்து தோற்று இருந்தால் அவர் உங்களின் வழியாக முயற்சி எடுப்பார். இறந்த அவரின் ஆத்மா உங்களுக்கு உதவி புரியும். அவரின் ஆத்மா உங்கள் ஆத்மா வழியாக அவரின் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளும்.

பரம்பரை பரம்பரையாக பணக்காரர்களாகவே இருக்கின்றார்கள் அல்லவா. அவர்களின் ரகசியம் இது தான். ஒருத்தர் அந்த வீட்டில் நல்ல நிலையில் இருந்தால் அவர்கள் அவர்களின் பரம்பரைக்கு தங்களின் எண்ணங்களை கடத்துகிறார்கள்.

ஒரு சில குடும்பங்களின் தொடர்ந்து இசை வல்லுனர்களாக இருந்தால் அவர்களின் குழந்தைகளும் அதனை பின்தொடர்ந்து அதே துறையில் வருவதற்க்கு காரணம் இது தான். அவர்களின் ஆத்மா இவர்களுக்கு உதவி புரியும்.

உங்களின் முன்னோர்கள் கோவில் கோவிலாக ஆண்டிபோல் சுற்றிக்கொண்டு இருந்தால் நீங்களும் அது போல் தான் இருப்பீர்கள். அவர்களின் நிறைவேறாத எண்ணம் உங்களின் மீது பாய்ந்து உங்களை நன்றாக பயன்படுத்திக்கொள்கிறது.

நான் உங்களை பணக்காரர்கள் இருக்கும் இடத்திற்க்கு செல்ல வைப்பதும் இந்த முறையில் தான். நீங்கள் பணக்காரர்களாக இல்லை என்றாலும் உங்களின் மகன் பணக்காரன் ஆகிவிடுவான். இன்றைக்கு நீங்கள் செய்யும் செயல் பல கோடி ஆண்டுகள் உங்களை பின்தொடர்ந்து வருகின்றது என்பது உங்களுக்கே தெரியாது.

உங்களின் முன்னோர்களுக்கு திதி எல்லாம் நான் செய்ய சொல்லுவதற்க்கு காரணம் யாராவது நல்ல பணக்காரர்களாக ஆகவேண்டும் என்ற எண்ணத்தோடு இறந்து இருந்தால் அவர்களின் புண்ணியம் மற்றும் எண்ணங்கள் உங்களுக்கு கிடைக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: