Followers

Wednesday, May 28, 2014

ஆன்மீக அனுபவங்கள் 164


வணக்கம் நண்பர்களே!
                    இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் சாமியார்களைப்பற்றி உங்களுக்கு தெரியும். இவர்கள் உங்களிடம் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என்று கற்பிப்பார்கள் ஆனால் அவர்களின் ஒழுக்கம் கேள்வி குறியாக இருக்கும்.  எப்படி இவர்கள் சக்தி உடையவர்களாக இருக்கின்றார்கள் என்று ஒரு நாள் நீங்கள் யோசித்து இருந்தால் நீங்களும் கார்ப்பரேட் அளவுக்கு உயர்ந்து இருப்பீர்கள்

நிறைய சாமியார்கள் கொலை கூட செய்து இருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் போதிப்பது அன்பு என்ற ஒன்றை போதிக்கிறார்கள். கொலை கொள்ளை இருக்கின்ற அனைத்து தீய செயல்களும் செய்துக்கொண்டு இருக்கின்றார்கள். கார்ப்பரேட் சாமியார்களிடம் சென்று நீங்கள் எதிர்த்தால் அவர்கள் உங்களை கொல்லுவதற்க்கு கூட தயங்கமாட்டார்கள். இதனை எல்லாம் செய்துக்கொண்டு ஆன்மீகத்திலும் இருக்கின்றார்கள்.

அவர்களிடம் ஒரு சின்ன சக்தி இருந்தால் மட்டுமே இப்படி எல்லாம் மக்களை கூட்டமுடியும். அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்றால் அவர்கள் எந்த நேரத்தில் எதனை செய்யவேண்டும் என்பதை சிறப்பாக கற்று இருக்கிறார்கள். நீங்கள் எந்த நேரத்தில் எதனை செய்யவேண்டும் என்பதை தவறாக செய்துக்கொண்டு இருக்கின்றீர்கள்.

நீங்கள் பூஜை செய்துக்கொண்டு இருக்கும்பொழுது வேறு ஒன்றை நினைத்துக்கொண்டு இருக்கின்றீர்கள். அவர்கள் பூஜை செய்யும்பொழுது பூஜையை மட்டும் செய்துக்கொண்டு இருக்கின்றார்கள். அந்தந்த இடத்தில் உங்களின் மனநிலை இருந்தால் நீங்கள் எப்படி இருந்தாலும் ஆன்மீகத்திலும் இருக்கமுடியும். 

நம்ம மனது இருக்கும் இடத்தில் இல்லாமல் அலைகின்றது அவர்களின் மனது அவர்கள் இருக்கும் இடத்தில் இருப்பதுபோல் வைத்திருக்கின்றனர். மனதை வென்று ஆன்மீகத்தில் நீங்கள இருந்தால் நீங்கள் தான் உலகத்தில் மிகப்பெரிய ஆன்மீகவாதி. தவறுகளைப்பற்றி அவர்களே கவலைப்படாமல் அதனை செய்துக்கொண்டு இருக்கும்பொழுது உங்களுக்கு என்ன அதனைப்பற்றி கவலை

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: