Followers

Friday, May 30, 2014

விரைய தசா பகுதி 17


வணக்கம் நண்பர்களே!
                    விரைய தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். எனது நண்பரின் அப்பாவிற்க்கு பனிரெண்டாவது வீட்டில் சந்திரன் இருந்தது. ராசி அதிபதி என்பதால் தன்னுடைய தசாவை நன்றாக நடத்தும் என்று எதிர்பார்த்தார்கள்.

சந்திரன் தசா ஆரம்பித்தது கண்ணில் நீர் வடிய ஆரம்பித்தது இடது கண் பிரச்சினையை சந்தித்து. எத்தனையோ மருத்துவர் பார்த்தும் ஒன்றும் சரிவரவில்லை. அப்பொழுது மருத்துவம் அந்தளவுக்கு வளர்ச்சியை காணவில்லை. அந்த ஊர் சிறிய ஊர் மருத்துவ வசதியும் குறைவு. 

கடைசியில் அந்த கண் பார்வை திறனை இழந்துவி்ட்டது. அவர்க்கு அதில் இருந்து பிரச்சினை இல்லை ஆனால் பார்வை திறனை இழந்துவிட்டார். பார்வை போய்விட்டது. எனக்கு அந்த நேரத்தில் பரிகாரம் செய்ய தெரியாது. சந்திரனுக்கு விளக்கு மட்டும் போட்டோம். அதில் ஒன்றும் நடைபெறவில்லை.

இப்பொழுது நாம் இருக்கும் நிலையில் இருந்தால் சந்திரனை ஆஞ்சநேயரை வைத்து சரிகட்டி இருக்கலாம். சந்திரனை சரிகட்டவேண்டும் என்றால் ஆஞ்சநேயர் ஒருவர் போதும்.

உங்களுக்கு சந்திரன் பிரச்சினை ஏற்படுத்தினால் ஆஞ்சநேயரை வைத்து சரி செய்துவிடலாம். ஆஞ்சநேயருக்கு ஒரு வெற்றிலை மாலை சாத்தினால் போதும். எந்த பிரச்சினைக்கும் அந்த பிரச்சினைக்கு தகுந்த பரிகாரத்தை செய்துவிடவேண்டும். அதன் பிறகு மருத்துவரை பார்த்துக்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: