Followers

Monday, May 5, 2014

பிரச்சினையும் தீர்வும் பகுதி 25


வணக்கம் நண்பர்களே!
                    பிரச்சினையும் தீர்வுகளும் பகுதியை பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது.  ஒவ்வொறு பகுதியாக ஆரம்பித்தாலும் இடையில் அதனை மறந்துவிட்டு வேறு ஒன்றில் மனம் சென்று அதனை எழுதிக்கொண்டிருக்கிறேன். அனைத்து பகுதியையும் இனி தொடர்ந்து பார்க்கலாம்.

என்னிடம் நிறைய பேர் கேட்பது எனது மகளும் மருமகனும் ஒழுங்காக வாழவில்லை அவர்கள் சண்டைப்போட்டுக்கொண்டே இருக்கின்றனர். விவாகாரத்து செய்யவேண்டும் என்று சொல்லுகின்றனர் அவர்களின் ஜாதகத்தை பார்த்துச்சொல்லுங்கள் என்று அனுப்பி வைப்பார்கள். நானும் அதனை எல்லா் பார்த்து பரிகாரம் செய்ய சொல்லுவேன்.

நாம் என்ன தான் பரிகாரம் சம்பந்தப்பட்ட ஜாதகத்திற்க்கு செய்தாலும் ஒரு சில நேரங்களில் அது வேலை செய்யாமல் போய்விடும். அதற்கு காரணம் என்ன என்று பார்த்தால் அவர்களின் குடும்பத்தில் ஒழுங்காக குலதெய்வ வழிபாட்டை செய்யாமல் இருப்பார்கள். குலதெய்வ வழிப்பாட்டை ஒருவர் செய்யவில்லை என்றால் அவர்களின் மகள்களின் திருமணவாழ்க்கையில் விதி விளையாடிவிடும்.

உங்களின் மகளுக்கு எப்படிப்பட்ட தோஷம் இருந்தாலும் அதனை குலதெய்வம் எடுத்துவிடும். அவளை வாழவைத்து அழகு பார்க்கும். அதனால் குலதெய்வ வழிப்பாட்டை உங்களின் மகளின் நலன் கருதி செய்யுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: