Followers

Monday, May 5, 2014

விரைய தசா பகுதி 8


வணக்கம் நண்பர்களே!
                    சென்னையில் நல்லமழை பெய்கிறது வெப்பத்தில் இருந்து தப்பிக்க வைத்துவிட்டது கடவுள். காலையில் வாக்கிங் சென்றுவிட்டு தான் அனைத்து வேலையையும் ஆரம்பிப்பேன். இன்று மழை பெய்வதால் வாக்கிங் போகவில்லை. பதிவை எழுத ஆரம்பித்துவிட்டேன்.

விரைய தசா பார்த்துக்கொண்டிருந்தோம் விரைய ஸ்தானம் ஜல ராசியாக அமைந்து அங்கு ராகு அமர்ந்தால் அவர் மதுபான கடையே வீடு என்று இருப்பார். இன்று பொதுவாக மது அருந்துதல் தமிழ்நாட்டில் நாகரீகம் என்று வந்துவிட்டது என்று நினைக்கிறேன். பெரும்பாலோனோர் இதனை அருந்துகின்றனர். இவர்களை தூண்டுவதே இந்த விரைய வீடு தான். விரையத்தை இந்த வழியில் செய்ய வைக்கின்றது.

பனிரெண்டில் அமரும் அனைத்து கிரகங்களும் இதனை தூண்டினாலும் ராகு, கேது மற்றும் சனி அதிகமாக தூண்டும்.உங்களுக்கு இப்படி இருந்து நீங்கள் குடிக்காமல் இருந்தால் கூட அவ்வப்பொழுது இந்த வேலையை செய்வதற்க்கு பதில் வேறு மாதிரியான வேலையை செய்யவேண்டும். புண்ணிய கணக்கில் சேருவதற்க்கு ஏதாவது ஒரு கோவிலுக்கு தண்ணீர் வாங்கி கொடுத்துவிடுங்கள். ஜலராசியாக பனிரெண்டாவது வீடு இருந்து நீங்கள் குடிக்காமல் இருந்தால் கோவிலுக்கு என்று உங்களின் செலவில் குடிதண்ணீர் வாங்கிகொடுத்துவிடுங்கள்.

அடிக்கடி தீர்த்தயாத்திரை செய்யுங்கள். காசி இராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு சென்று அங்கு தீர்த்த குளியல் செய்யுங்கள்.இந்த கிரகங்களால் வரும் பாதிப்பு குறையும்.எப்படிப்பட்ட பாதிப்பு எல்லாம் வரும் என்று இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: