Followers

Thursday, May 1, 2014

இனிய தொடக்கம்


வணக்கம் நண்பர்களே!
                    கேள்வி கேட்டதை தொடர்ந்து இது வரை இருபது நண்பர்களுக்கு மேல் எனக்கு அவர்களுக்கு தெரிந்த பதிலை அனுப்பியுள்ளனர். அவர்களுக்கு நன்றி.

ஒரு நண்பர் ஜாதககதம்பம் தமிழ்நாட்டிற்க்கு கிடைத்தது வரப்பிரசாதம் என்று சொல்லிருந்தார். ஒரு நண்பர் எனக்கு ஜாதககதம்பம் பக்தி மார்க்கத்தை தருகிறது. அதே நேரத்தில் ஞானமார்க்கத்தையும் தருகிறது என்று சொல்லிருந்தார். 

ஒருவர் நீங்கள் சொல்லும் ஆன்மீகம் பயிற்சியில் இறங்கவேண்டும். அது தான் ஆன்மீகம் என்று சொன்னார்.ஒவ்வொரு வரும் நல்ல விசங்களை சொல்லியுள்ளனர்.  

என்னைபற்றி இத்தனை பேர் நல்ல எண்ணங்களை கொண்டுள்ளீர்கள். கேள்வி கேட்டதலில் இருந்து புதிய நண்பர்களோடு பேசமுடிகிறது. புதியவர்களைப்பற்றி எனக்கு தெரியாமல் இருந்தேன். அவர்களோடு பேசவும் ஒரு வாய்ப்பை இந்த கேள்வி உருவாக்கியது. தொடர்ந்து அனைவரும் என்னை தொடர்புக்கொண்டு உங்களின் கருத்தை தெரிவியுங்கள். 

அயல்நாட்டில் இருந்து பல போன்கால்கள் இதனைப்பற்றி வருகிறது உங்களின் செலவை பொருட்படுத்தாமல் இதில் கலந்துக்கொண்டதற்க்கு நன்றி. உங்களின் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தை இந்த கேள்வி உருவாக்கும். அனைவரும் பங்குக்கொள்ளுங்கள். காலம் இருக்கிறது. நன்றாக சிந்தனை செய்து விட்டு என்னிடம் சொல்லுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: