Followers

Saturday, May 10, 2014

நேரம் உன்னதமானது


வணக்கம் நண்பர்களே!
                    ஒவ்வொருவரும் என்னை வந்து சந்திக்கவேண்டும் என்று கேட்பார்கள். பொதுவாக நான் அதற்கு சம்மதம் தெரிவிப்பதில்லை. அதற்கு காரணம் உங்களின் நேரத்தை ஏன் தேவையில்லாமல் செலவு செய்யவேண்டும் என்பதற்க்காக சொல்லுகிறேன்.

என்னை சந்திக்கும் நேரத்தில் நீங்கள் ஒரு நல்ல விதமான பிராத்தனையை கடவுளிடம் வைத்துக்கொள்ளலாம். வீட்டில் அமர்ந்து உங்களின் பிராத்தனையை வைக்கும்பொழுது உங்களின் வேண்டுதலை ஏற்று உங்களின் குலதெய்வம் உங்களுக்கு நல்லது செய்யும்.

பல பேர்கள் சாமியாரை தரிசனம் செய்கிறேன் என்று போய் தங்களின் நேரத்தை அதிகம் செலவு செய்கிறார்கள்.யாராவது எங்கையாவது ஒருத்தர் சும்மா எங்கையாவது படுத்து இருந்தால் அவர் ஒரு சித்தர் என்று கிளப்பிவிட்டு அவரை தரிசனம் செய்தால் அனைத்தும் நடக்கும் என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

உங்களை முட்டாளாக மாற்றும் எந்த ஒரு செயலிலும் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளாதீர்கள். தாடி வைத்தவன் எல்லாம் சித்தர்களாக மாறிவிட்டார்கள். காவி உடுத்தினால் ஆன்மீகவாதியாக இருக்கிறார்கள் என்று போய் ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான பிழைப்பு தானே தவிர வேறு ஒன்றும் இருக்காது.

நான் உயர்ந்தவன் இந்த உலகத்தில் உள்ளவர்களை விட நான் உயர்ந்தவன் என்று நீங்கள் நினைத்துக்கொள்ளுங்கள். எனக்கு தேவையானவற்றை நானே பெற்றுக்கொள்வேன் என்று நீங்கள் பிராத்தனை செய்தால் போதும். உங்களுக்கு தேவையானவற்றை நீங்களே பெற்றுக்கொள்ளமுடியும்.

உங்களின் நேரத்தை வீணாக்காமல் ஏதாவது ஒரு ஆன்மீகப்பயிற்சியை வீட்டிலேயே இருந்து செய்யும்பொழுது அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.உண்மையான ஆன்மீகம் வெளியில் தேடி கிடைப்பதில்லை உங்களுக்குள்ளே தேடி கிடைக்கும் ஒரு அற்புதம் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு பிராத்தனை நேரத்தை அதிகப்படுத்துங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: