Followers

Wednesday, May 14, 2014

சோதிட அனுபவம்


ணக்கம் ண்பர்களே!
                    எனக்கு தெரிந்த ஒரு நண்பர் தீவிர சாய்பாபா பக்தராக இருந்தார். அவரின் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அவர்போல் சாய்பாபா பக்தராக இருந்தார். அவருக்கு அனைத்து செல்வ வளங்களும் நிறைந்து வந்தன. அவருக்கு என்று பல கட்டிடங்கள் அமைந்தது. அவர் அனைத்தையும் சீரடி சாய்பாபா தான் கொடுத்தார் என்று சொல்லுவார்.

சுக்கிரனின் தசா ஆரம்பித்தது. நான் அவரிடம் அப்பொழுது சொன்னேன். சார் நீங்கள் சாய்பாபாவை விட்டுவிடுங்கள். ஏதாவது ஒரு அம்மனை வெள்ளிக்கிழமை அன்று வழிப்பட்டு வாருங்கள் என்று சொன்னேன். அவர் சொன்னார் ராஜேஷ் அது எல்லாம் வேண்டாம் சாய்பாபாவை தவிர வேறு யாரையும் நான் கும்பிடுவதில்லை என்று சொன்னார். சரி நானும் விட்டுவிட்டேன்.

நான் விட்டுவிட்டால் என்ன கிரகங்கள் சும்மா இருக்குமா என்ன சுக்கிரன் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார். சுக்கிரனின் தசாவில் பாபா வழிபாடு எடுபடாது. சுக்கிரன் பிரித்து மேய்ந்துவிட்டார். அனைத்து வியாபாரமும் படுத்துவிட்டது. கட்டிய பில்டிங்கில் எல்லாம் கடையை காலி செய்து போய்விட்டார்கள். புதிதாக யாரும் கடைக்கு வரவில்லை. பொருளாதார சிக்கல் ஏற்பட்டுவிட்டது.

பொருளாதார சிக்கல் வந்தால் தானே மனிதனுக்கு சோதிடரின் முகவரி தெரியும். என்னை கூப்பிட்டு விசயத்தை சொன்னார். அவரிடம் நான் தான் அப்பொழுதே சொன்னேன் என்று சொல்லிவிட்டு காளி வழிப்பாட்டை சொல்லிக்கொடுத்து செய்ய சொல்லிவந்தேன். இப்பொழுது நல்ல நிலைக்கு திரும்பிவிட்டார்.

சோதிடத்தில் எந்த தசாவிற்க்கு எந்த வழிபாடு செய்தால் நன்றாக செல்லும் என்பதை தெரிந்து வைத்திருக்கவேண்டும். அந்தந்த தசாவில் அதனை செய்துவரவேண்டும். அப்பொழுது மட்டுமே நாம் கிரகங்களின் தீயபலன்களில் இருந்து தப்பிக்கமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

3 comments:

Unknown said...

100% True. No body can refuse this statement if they really know very well about astrology.This is very important message to everyone. Keep up the good work Sir.

rajeshsubbu said...

வணக்கம் தங்களின் கருத்துக்கு நன்றி சார்.

antonyarun said...

Dear Senthil
NICE COMMENT
Thanks
Antony