Followers

Monday, May 12, 2014

மந்திர பயிற்சி விளக்கம்


ணக்கம் ண்பர்களே!
                    காயத்ரி மந்திர பயிற்சி செய்பவர்கள் என்னிடம் சொல்லுவார்கள் தொடர்ந்து செய்யமுடியவில்லை. மனதில் பல எண்ணங்கள் வந்துக்கொண்டே இருக்கிறது என்று சொல்லுவார்கள். 

உங்களுக்கு இந்தமாதிரி எண்ணங்கள் வந்தால் நீங்கள் ஆன்மீக உலகத்திற்க்கு செல்லபோவதற்க்கு தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.உங்களின் சுயத்தோடு நீங்கள் மோத தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம். இந்த நேரத்தில் உங்களின் மந்திரத்தை விடாமல் செய்ய ஆரம்பித்துவிட்டால் நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறமுடியும்.

எண்ணங்களோடு வாழுவதற்க்கு மட்டுமே மனிதன் வந்து இருக்கிறான். இந்த எண்ணங்களை ஒருத்தர் கவனிக்க தொடங்கிவிட்டால் அவர்கள் எளிதில் ஆன்மீகத்தை அடையமுடியும். எண்ணங்கள் தாக்குதல் நடத்த ஆரம்பித்தவுடன் அதனை தவிர்க்க டி.வி பார்க்கிறான். சினிமா பார்க்கிறான். அல்லது செல்போனை எடுத்து ஏதாவது செய்ய ஆரம்பித்துவிடுகிறான். இது எல்லாம் அவனோடு எண்ணத்தை தவிர்க்க செய்யும் ஒரு வழி.

ஒரு எண்ணம் ஏன் வருகிறது என்று கவனிக்க ஆரம்பித்து விட்டால் அதில் இருந்து நீங்கள் விடுப்பட்டு உங்களின் மந்திரத்தை ஜெபிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

பல நண்பர்கள் காயத்ரி மந்திர பயிற்சி செய்தாலும் ஒரு சிலர் மட்டுமே அதனை தொடர்ந்து செய்யமுடியும் அதற்கு காரணம் அவர்களின் ஜென்ம கர்மாவின் எண்ணங்கள் தாக்குதல் நடைபெறுவதால் அதனை தொடர முடியாமல் நின்றுவிடுகிறார்கள். எண்ணங்களை கவனிக்க ஆரம்பித்துவிட்டால் உங்களின் மந்திரத்தை தொடர்ந்து செய்யமுடியும். மேலும் விபரங்களுக்கு என்னை தொடர்புக்கொண்டு கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: