Followers

Monday, May 12, 2014

இலவச சோதிடம் பார்க்க வருபவர்களுக்கு


வணக்கம் நண்பர்களே!
                    இதுவரை எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் சென்றுக்கொண்டிருப்பது ஜாதககதம்பத்தின் இலவச சோதிட சேவை மட்டுமே. பல ஏழை மக்கள் பயன்பெறவேண்டும் என்பதற்க்காக மட்டுமே இதனை இது நாள் வரை தொடர்ந்து செய்து வருகின்றேன்.

இந்த இலவச சோதிட சேவையில் வருபவர்களுக்கும் கட்டண சோதிடத்தில் வருபவர்கள் போலவே அனைத்து தகவலையும் சொல்லிவிடுவது உண்டு. அவர்கள் கேட்க நினைக்கும் கேள்வி முடிந்தளவு பதிலை தந்துவிடுவேன்.

இலவச சோதிடத்தில் வருபவர்கள் பெரும்பாலும் பதிவை முழுவதும் படித்துவிட்டு வாருங்கள் என்று சொல்லுவது உண்டு. இதில் ஒரு சின்ன சிரமம் எனக்கு ஏற்படுகிறது அதனை உங்களுக்கு தெளிவுப்படுத்தி விடவேண்டும் என்று தான் இப்பதிவையே உங்களுக்கு தருகிறேன். 

இரவு நேரத்தில் பெரும்பாலும் நான் சோதிடம் பார்ப்பதில்லை. நீங்கள் இரவு நேரத்தில் எனக்கு கூப்பிடவேண்டாம் என்று சொல்லுவது உண்டு. பல நண்பர்களுக்கு இரவு தான் பகல் போல் தெரிகிறது என்று நினைக்கிறேன். இரவு பத்து மணிக்கு மேல் எனக்கு போன் செய்கிறார்கள். பத்து மணிக்கு எல்லாம் நான் தூங்கிவிடுவேன்.

இலவச சோதிடத்தில் வருபவர்கள் ஒரு சிலர் தங்களின் பெருமையை என்னிடம் காட்டுவதற்க்கு அவர் சொல்லுவது என்னால் உங்களுக்கு கட்டணத்தை கட்டமுடியும் என்று சொல்லுகிறார்கள். கட்டணத்தை கட்ட முடியாமல் இருக்கும் நிலையில் தானே இலவச சோதிடத்தில் வருகிறீர்கள் இதில் என்ன பெருமை வேண்டிக்கிடக்கிறது. பெருமையை உங்களின் ஊரில் உள்ளவர்களிடம் காட்டாலும் சோதிடனிடம் காட்டி என்ன உங்களுக்கு நடந்துவிடபோகிறது.

நீங்கள் இலவசசோதிடத்தில் வந்தால் உங்களுக்கு தேவையானவற்றை என்னிடம் இருந்து பெற்றுக்கொள்வது உங்களின் பொறுப்பு மாறாக உங்களின் பெருமையை எல்லாம் என்னிடம் சொல்லிக்கொண்டு நேரத்தை வீணடிக்காதீர்கள். நம்ம ஆளுங்க வந்த வேலையை விட்டுவிடுவார்கள் தேவையில்லாத வேலை எல்லாம் செய்துக்கொண்டு இருப்பார்கள். நல்ல சேவையை பயன்படுத்திக்கொள்ளுங்கள்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: