Followers

Tuesday, May 13, 2014

உண்மையோடு


வணக்கம் நண்பர்களே!
                    பதிவுகளை படித்துவிட்டு நண்பர் ஒருவர் என்னிடம் பேசினார். எப்படி இப்படி ஆணித்தரமாக சொல்ல வந்ததை சொல்லுகின்றீர்கள் என்று கேட்டார். 

உண்மை என்ற ஒன்றை பிடித்தால் அதனை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். யாருக்கும் பயம்கொள்ள தேவையில்லை. உண்மையை நான் சொல்லுவதால் மட்டுமே பல நண்பர்கள் நமது ஜாதககதம்பத்தை படிக்கிறார்கள். நீங்களும் உண்மையை சொன்னால் உங்களிடம் மக்கள் வருவார்கள்.

நான் எழுதுவது அனைத்தும் என்னுடைய அனுபவத்தில் அது இருந்தால் மட்டுமே எழுதுவது உண்டு. அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்று எழுதுவது கிடையாது. அனுபவத்தில் உள்ளதை தருகிறேன்.

சோதிடத்தி்ல் கூட என்னுடைய அனுபவம் மட்டுமே எழுதுவேன். நான் படித்த சோதிட பாடத்தில் உள்ளது எல்லாம் இதுவரை பல நடைபெறவில்லை. அது நடைபெறும் காலத்தில் உடனே உங்களுக்கு பதிவில் தெரிவித்துக்கொண்டே இருப்பேன்.

நான் நிறைய சோதிட புத்தகங்களை எல்லாம் வைத்து பாடம் வேண்டுமானால் நடத்தலாம் ஆனால் அது நடந்தால் தானே நான் எழுதமுடியும். இதுவரை பாதி கூட நடைபெறவில்லை. படித்த புத்தகம் நாலு புத்தகம் மட்டுமே. உண்மையை பார்க்க பார்க்க நான் உங்களுக்கு எழுதுகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: