Followers

Monday, May 19, 2014

நண்பரின் பதில்


வணக்கம் நண்பர்களே !
                    நண்பர் ஒருவர் நான் கேட்ட கேள்விக்கு எனக்கு பதில் அளித்துள்ளார் அவரின் பதிலை அப்படியே தந்துள்ளேன்.

நான் பெங்களுரில் வசித்து வருகிறேன். ஜாதககதம்பத்தை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். நான் ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன். நான் சோதிட சம்பந்தமாக பல வெப்சைட்கள் படித்து வந்தாலும் ஜாதககதம்பத்தில் வரும் சோதிடம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. மிகவும் ஆவலுடன் படித்துவருகிறேன். பூர்வபுண்ணியத்தைப்பற்றிய பாடம் மிகவும் அருமையாக இருந்தது. 

நான் பல சாமியார்களை நேரில் சந்தித்து இருக்கிறேன். ஆன்மீக தாகம் எனக்கு நிறைய இருந்தது அந்த காரணத்தால் பல ஆன்மீகவாதிகளை சந்தித்து ஆசிப்பெற்று இருக்கிறேன். ஜாதககதம்பத்தில் வரும் ஆன்மீக அனுபவங்களை படித்துவிட்டு இதனை எழுதுவது கண்டிப்பாக ஒரு சோதிடர்களாக இருக்கமுடியாது  என்று நினைத்தேன். ஒரு தடவை நேரில் பார்த்தால் தெரிந்துவிடும் என்று நினைத்தேன். நான் நல்ல ஆன்மீகப்பயிற்சி பெற்று இருக்கிறேன். நேரில் சந்திக்கும்பொழுது என்னால் உணரமுடியும் என்று நினைத்து உங்களிடம் அனுமதி பெற்று உங்களை சந்திக்க வந்தேன்.

சென்னைக்கு வந்து உங்களை சந்திக்கும்பொழுது தெரிந்தது. வாழ்க்கையில் இந்த நாள் நான் உங்களை சந்திக்காமல் இருந்துவிட்டேனே என்று தோன்றியது. எத்தனையோ சாமியார்களிடம் நான் பார்த்தைவிட மிகப்பெரிய சக்தி இருப்பதை உணர்ந்துக்கொண்டேன். 

என்னை புதுபித்துக்கொள்ள உங்களின் தரிசனம் கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம் எனக்கு கிடைத்து இருக்கிறதே என்று நினைக்கும்பொழுது நான் எவ்வளவு தூரம் பாக்கியம் பெற்று இருக்கிறேன் என்று நினைத்து என்னை படைத்த அந்த கடவுளுக்கு நன்றியை சொன்னேன்.

இப்பொழுது நீங்கள் யாரையும் சந்திப்பதில்லை என்று பதிவில் சொல்லியுள்ளீர்கள். உண்மையில் எனக்கு அதிர்ச்சி அளித்தது. தயவு செய்து எங்களைப்போல் உள்ளவர்களுக்கு உங்களை தரிசிப்பதால் மட்டுமே எங்களை புதுப்பித்துக்கொள்ளமுடியும் எங்களின் கர்மா அனைத்தும் தீரும் என்று நம்புகிறேன்.

ஜாதககதம்பத்தில் வரும் ஆன்மீகப்பதிவுகளில் உள்ள கருத்துக்களே இந்த காலத்திற்க்கு மக்களுக்கு ஏற்ற ஆன்மீகமாக இருக்கமுடியும். ஜாதகதம்பத்தை படிப்பதைவிட உங்களை பார்ப்பதில் மிகப்பெரிய சக்தி எங்களுக்கு கிடைக்கும்.

அன்பான குருவின் பாதம் பணிந்து
மணிகண்டன்

என்னை இந்தளவுக்கு புகழ்ந்தது யாரும் கிடையாது என்று நினைக்கிறேன். ஏன் இப்படி மாறிவிட்டீர்கள் நண்பரே. அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. நான் உங்களைப்போல் ஒரு சாதாரணமானவன். பெரிய அளவில் நீங்கள் பார்க்காதீர்கள்.

நண்பர்களே பல பேர்களிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கிறேன். உங்களின் பதிலை எனக்கு எழுதி அனுப்புங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

BALA said...

astro vannakam is one of the best web site in respect of astrology matters and you are the one very simple ,educative to the ordinary etc etc. It is very unfortunate that we are not able to visit and see you since you are not encouraging. Further ,if @least publish your photo in the profile to see you .Thanks