Followers

Friday, May 2, 2014

சனிக்கும் வெயிலுக்கும் பரிகாரம்


ணக்கம் ண்பர்களே!
                    சென்னையில் நல்ல வெயில் வாட்டுகிறது. என்ன தான் சக்தியோடு இருக்கும் மனிதன் என்றாலும் இந்த வெயிலில் அவனின் சக்தி எல்லாம் வீணாக சென்றுவிடும். உடலுக்கு தேவையான குளிர்ச்சியை தந்தால் மட்டுமே கோடை காலத்தில் வரும் நோயில் இருந்து நாம் தப்பிக்கலாம்.

வெயிலுக்கு மற்றும் சனிக்கும் சேர்ந்த ஒரு பரிகாரமாக ஒன்றைச்சொல்லிவிடலாம் என்று இந்த பதிவை எழுத நினைத்தேன். வாரம் வாரம் சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வாருங்கள். உங்களின் உடலில் இருந்து சூடும் குறையும் அதே நேரத்தில் சனியின் பிடியில் நீங்கள் இருந்தால் அதிலிருந்து மீளலாம். 

பழைய காலத்தில் எல்லாம் சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பார்கள்.குளிக்கும் பழக்கம் இருந்து வந்தது இன்றைய காலத்தில் இது எல்லாம் நடைமுறையில் இல்லை என்று நினைக்கிறேன். இனி வரும் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் எண்ணெய் தேய்த்து குளித்து வாருங்கள்.

வெள்ளிக்கிழமை அன்று தைலக்குளியல் குளிக்க சொல்லிருந்தேன். அதோடு வெள்ளை நிற உடைகளை அணிய சொல்லிருந்தேன். அதனை எல்லாம் செய்துக்கொண்டு வருகிறீர்கள் அல்லவா. அதேப்போல் இந்த இனி சனிக்கிழமை அன்று எண்ணெய் தேய்த்து குளித்து வாருங்கள். நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கவும். ஒரு சிலர் எந்த எண்ணெய் என்று தெரியாது. எள் எண்ணெய் தான் நல்ல எண்ணெய் ஆகும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

nallur parames said...

Udal muluvadhum poosi kulikkava thalaikku mattum theythu kulikkava?

rajeshsubbu said...

உடல் மற்றும் தலைக்கு தேய்த்து குளியுங்கள்.