Followers

Thursday, May 22, 2014

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    இரண்டு நாட்களில் பதிவுகள் வரவில்லை என்றவுடன் பல போன்கால்கள் வந்தவண்ணம் இருந்தன. அம்மனுக்கு பூஜை வைத்த நாள் கூட பல பேர் மறந்துவிட்டார்கள். அம்மனுக்கு பூஜை செய்வதாக இருந்தால் அந்த நாளில் பெரும்பாலும் எனக்கு நாள் முழுவதும் வேலை இருந்துக்கொண்டே இருக்கும். இப்பொழுது எல்லாம் பூஜை நன்றாக அலங்காரம் செய்து செய்வதால் எனக்கு வேலை அதிகம். இதற்காக பூ மாலை வாங்குவதே அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. அதனை வாங்கி வந்து அலங்காரம் எல்லாம் செய்து முடிப்பதற்க்குள் நேரம் மாலை ஆறு மணிக்கு மேல் சென்றுவிடுகிறது.

விநாயகர் அபிஷேகம் செய்வதற்க்கு குறைந்தது முக்கால் மணி நேரம் ஆகிவிடும். அனைத்து தெய்வங்களும் பூஜை முடித்து வருவதற்க்குள் நேரம் சென்றுவிடுகிறது. இந்த நேரத்தில் கண்டிப்பாக பதிவு போடமுடியாது.பல பேர்களின் விருப்பத்தை நிறைவேற்றவேண்டும் என்பதற்க்காக சிறந்த முறையில் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்படுகிறது. உங்களின் வேண்டுதல் அனைத்தும் கண்டிப்பாக நடைபெறும்.

அம்மனுக்கு என்று பூஜைக்கு மாதம்தோறும் அதிகமான நபர்கள் பணம் அனுப்ப தொடங்கிவிட்டனர். பல நண்பர்களுக்கு நல்லதை அம்மன் உடனே நடத்திக்கொடுப்பது மட்டுமே இதற்க்கு காரணம். அதே நேரத்தில் தளத்திற்க்கு வரும் புதிய நண்பர்களும் இது எல்லாம் வேண்டாம் என்று ஒதுங்கிவிடாமல் அம்மனிடம் வேண்டுதலை வைத்து உங்களின் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளுங்கள்.

பதிவிற்க்கு வரும் புதிய நண்பர்கள் அனைவரும் அனைத்து பதிவுகளையும் படிப்பதற்க்கு முன்னால் கூட உங்களின் வேண்டுதலை வைக்கலாம். அம்மனிடம் வேண்டுதல் வைத்தால் பணம் அனுப்பவேண்டும் என்ற நிலை ஏற்படும் என்று ஒரு சில ஏழை மக்கள் நினைக்கலாம். உங்களால் கொடுக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டால் என்ன உங்களின் அன்பை அம்மனிடம் காட்டி உங்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: