Followers

Thursday, May 29, 2014

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    இரண்டு மாதத்திற்க்கு முன்பு ஒரு நண்பர் வழியாக ஒரு நண்பர் அறிமுகம் ஆனார். அவர் அந்த நேரத்தில் மிகுந்த கஷ்டத்தில் இருந்தார். அவர் என்னிடம் சோதிடம் பார்த்துவிட்டு சென்றுவிட்டார். சிரமபட்டு ஒரு தொழிலை தொடங்கினார். அவர் தொழில் தொடங்கும்பொழுது என்னிடம் சொல்லிவிட்டு தொடங்கினார். 

அவர் தொழில் தொடங்கும்பொழுது அவர் என்னிடம் சொல்லுவதற்க்கு முன்பே எனது வங்கி கணக்கில் சிறிய தொகையை செலுத்திவிட்டு எனக்கு போன் செய்தார். ஏன் இப்பொழுதே நீங்கள் பணம் செலுத்துகிறீர்கள் என்று கேட்டேன். இல்லை உங்களுக்கு செலுத்திவிட்டு தொடங்கினால் தான் எனது தொழில் நன்றாக நடக்கும் என்று சொன்னார். நான் நினைத்தேன் என்னடா இந்த காலத்தில் இப்படி ஒரு பிள்ளையா என்று இருந்தேன்.

அடுத்த மாதமும் அவர் வங்கி கணக்கில் பணம் செலுத்திவிட்டு சொன்னார். சரி என்று நான் அவர்க்கு என்று ஒரு சில சின்ன வேலைகளை செய்ய தொடங்கினேன்.அவர் நல்ல வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அவரை நான் ஒரு முறை தான் பார்த்து இருக்கிறேன். நானாக போன் செய்தால் மட்டுமே உண்டு. அவர் எனக்கு போன் கூட செய்யமாட்டார். 

அம்மன் அவருக்கு நிறைய செய்கிறது. இன்று கூட குரு அவர்கள் அவனுக்கு என்ன தேவையோ அத்தனையும் செய்துகொடு அவன் பணம் கொடுக்கிறானோ இல்லையோ அவனுக்கு அனைத்தையும் கொடுத்துவிடு என்று சொல்லிவிட்டார். 

பணத்தை அவர் அனுப்புகிறார் என்பதற்க்காக இல்லை அவரின் சரணாகதி நிலை அவரை உயர்த்துகிறது. அம்மனிடம் அப்படி ஒரு சரணாகதி அடைந்திருக்கிறார். அப்படி அவர் சரணாகதி அடையவில்லை என்றால் குரு எனக்கு சொல்லமாட்டார். 

பல பேர் எனக்கு நிறைய பணம் அனுப்பியுள்ளார்கள். அவர் எனக்கு அனுப்பிய தொகை 600 ரூபாய் மட்டுமே. யாருக்குமே கிடைக்காத பொக்கிஷத்தை பெற்றதற்க்கு காரணம் அம்மனின் மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கை. 

அவர் ஜாதககதம்பம் எல்லாம் படித்தது இல்லை. அவரின் நண்பர் சொன்னார். ஒரு முறை என்னை சந்தித்து பேசினார். நம்பிக்கை எப்படி வைக்கவேண்டும் என்பதற்க்கு அவர் தான் ஒரு சிறந்த உதாரணம். இதுவரை யாருக்கும் செய்யாத விசயங்களை எல்லாம் அவருக்காக செய்ய போகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

nallur parames said...

Nampikkaithan aanmeegam.