Followers

Tuesday, May 13, 2014

கேள்வி & பதில்


ணக்கம் ண்பர்களே!
                    நேற்று என்னோடு பேசிய நண்பர் ஒருவர் சொன்னார். ஆன்மீகத்திற்க்கு வந்தால் அத்தனையும் விட்டுவிட மனது நினைக்கிறது. இல்லறத்தில் இருந்துக்கொண்டு ஆன்மீகத்தை தொடர கடினமாக இருக்கிறது என்று சொன்னார். 

எதனையும் விட்டுவிட்டு ஓட சொல்லவில்லை ஆன்மீகம். இருந்த இடத்தில் இருந்துக்கொண்டே நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபடமுடியும். இதுவரை உங்களுக்கு கற்பிக்கப்பட்டது அனைத்தும் அனைத்தையும் துறந்துவிடு என்று போதித்து வந்துள்ளார்கள்.முதன் முறையாக அனைத்தையும் வைத்துக்கொண்டு நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள் என்று சொல்லுகிறேன். 

உங்களுக்கு என்னன்ன தேவைப்படுகிறதோ அத்தனையும் வைத்துக்கொள்ளுங்கள் அதனோடு ஆன்மீகத்தையும் வைத்துக்கொள்ளுங்கள். விட்டுவிட்டு ஒடினால் உங்களின் மனது நினைப்பு எல்லாம் உங்களின் வீட்டிலேயே இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபடமுடியாது. அதனால் நீங்கள் வீட்டில் இருந்துக்கொண்டே ஆன்மீகத்தை எடுத்துக்கொள்ளும் வழியை கற்றுக்கொடுப்பது தான் ஜாதககதம்பத்தில் வரும் ஆன்மீகம்.

இல்லறத்தில் இருந்தால் ஆன்மீகத்தில் ஈடுபடமுடியாது என்ற கருத்தை நீங்கள் திணித்துக்கொண்டு இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு ஆன்மீகம் வராது.எந்த நிலையிலும் நீங்கள் ஈடுபடமுடியும் என்ற கருத்தை உங்களின் மனதில் வையுங்கள். கண்டிப்பாக நீங்கள் ஆன்மீகவாதியாக மாறிவிடலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: