Followers

Monday, May 26, 2014

குலதெய்வ ஆண்டு பூஜை


வணக்கம் நண்பர்களே!
                    தற்பொழுது தஞ்சாவூர் அருகில் எனது சொந்த ஊரில் இருக்கிறேன். அம்மனின் வருடாந்திர பூஜை இன்று திங்கள்கிழமை நடைபெறுகிறது. பங்காளிகள் அனைவரும் சேர்ந்து பூஜை போடும் விழா.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் அவர்களின் குடும்பங்களை சேர்ந்த பங்காளிகள் அவர்களின் குலதெய்வத்திற்க்கு என்று பூஜை செய்வார்கள் அல்லவா. அதைப்போல் நமது அம்மனின் குடும்பத்தை சேர்ந்த பங்காளிகள் சேர்ந்து பூஜை செய்யும் விழா இது.

மாதம் தோறும் நாம் செய்யும் பூஜை என்பது வேறு. குடும்பங்கள் அனைவரும் சேர்ந்து பூஜை செய்யும் விழா இது. இந்த விழாவில் பலவித நிகழ்ச்சிகள் இருக்கும். அனைத்தும் இரவில் மட்டுமே நடைபெறும். விடியவிடிய பூஜைகள் நடைபெறும்.

இந்த பூஜையில் பங்கேற்பதற்க்காக மறுபடியும் நமது அம்மன் கோவிலுக்கு வந்து இருக்கிறேன். உங்களுக்காகவும் வேண்டிக்கொள்கிறேன். இந்த பூஜையை படம் எடுப்பதில்லை. மனதார உங்களுக்காக பிராத்தனை மட்டும் செய்கிறேன்.

உங்களின் குலதெய்வத்திலும் இந்த பூஜையை வருடத்திர்க்கு ஒரு முறை செய்வார்கள். அதில் கண்டிப்பாக நீங்கள் கலந்துக்கொண்டு உங்களின் குலதெய்வத்தின் ஆசியை பெறவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: