Followers

Friday, May 9, 2014

அனுபவமே பயிற்சி


ணக்கம் ண்பர்களே!
                    ஒவ்வொரு நண்பர்களும் என்னுடன் பேசும்பொழுது காயத்ரி மந்திரப்பயிற்சியை மட்டும் கேட்பார்கள். அதற்கு முக்கியமான காரணம் என்ன என்றால் அது மட்டும் தான் பயிற்சி என்று எழுதி வைப்பதால் அதன் மனநிலை அப்படி கேட்க தோன்றுகிறது.

ஜாதககதம்பத்தில் எழுதும் அனைத்தும் எனது அனுபவத்தில் இருந்து மட்டுமே எழுதிக்கொண்டு இருக்கிறேன். அந்த அனுபவங்கள் தங்களின் வாழ்க்கையில் நடந்ததா என்று நீங்கள் பார்த்தாலே போதும். 

அந்த அனுபவங்களை உங்களின் வாழ்க்கையில் செயல்படுத்தி பார்த்தாலே போதுமான ஒன்று. பல காலங்கள் உங்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கிறது என்றால் பயிற்சியில் மட்டும் உங்களின் மனம் சென்று இருக்கிறது. ஒரு பயிற்சி என்று பலகையை மாட்டிக்கொண்டு அதன் வழியாக படித்தால் தான் முழுமை பெறும் என்பது போல் உங்களின் மனநிலையை மாற்றி வாழ்ந்துக்கொண்டு இருக்கிறீர்கள். 

தினமும் வாழ்க்கையில் நடப்பதை நாம் கூர்ந்து கவனித்தால் அது உங்களை அந்த சக்தியிடம் கொண்டு செல்வதற்க்கு தான் இத்தனையும் நடைபெறுகிறது என்று உங்களுக்கு புரியும்.

ஜாதககதம்பத்தில் சொல்லும் ஒவ்வொரு கருத்தையும் நீங்கள் படிக்கும்பொழுது அது உங்களுக்குள் நடக்கிறதா என்று பாருங்கள் அப்படி நடக்க நான் சொல்லும் வழிகளை பின்பற்றி பாருங்கள். கண்டிப்பாக நடைபெறும்.

பயிற்சி என்று பாேட்டால் தான் பயிற்சி கிடையாது. ஒவ்வொரு அனுபவங்களும் உங்களுக்குள் நடக்க அனுமதித்தால் போதுமான ஒன்று நீங்கள் ஆன்மீகவாதியாக மாறிவிடலாம். தனியாக பயிற்சி எல்லாம் நாம் பொறுமையாக இருக்கும்பொழுது பார்த்துக்கொள்ளலாம்.

ஒவ்வொரு நாளும் எனக்கு நடந்ததை நான் ஆன்மீகமாக மாற்றினேன். நீங்களும் மாற்றினால் ஆன்மீகவாதியாக நீங்கள் எளிதில் மாறிவிடலாம்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: