Followers

Monday, May 26, 2014

ஆத்மபலம்



வணக்கம் நண்பர்களே!
                    இந்த பிரபஞ்சசக்தியை விட உங்களின் ஆத்மாவின் சக்தி அதிகம் என்று நான் சொல்லிருக்கிறேன். ஆத்மாவின் சக்தியை நாம் உயர்த்திக்கொண்டி இருந்தால் மட்டுமே நாம் அடைய நினைக்கும் இலக்கை நாம் அடையமுடியும்.

நமது ஆத்மா பல பிறவிகளை எடுத்து வந்ததால் அது கழைப்பை அடைந்துள்ளது. ஆத்மாவிற்க்கு பலம் சேர்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று உங்களிடம் சொல்லுவது எல்லாம் இந்த காரணத்தால் மட்டுமே. காயத்ரி மந்திரம் என்பது ஆத்மாவிற்க்கு பலம் சேர்க்கும் விதம் என்று உங்களிடம் சொல்லி அதனை செய்ய சொல்லி வருகிறேன்.  விடியற்காலையில் எழுந்து பிராத்தனை செய்யுங்கள்.

நான் பார்த்தவரையிலும் ஜாதககதம்பம் வழியாக வந்த நண்பர்கள் அனைவரும் ஆத்மபலம் குறைந்தவர்களாக தான் இருக்கின்றார்கள். அதே நேரத்தில் அவர்கள் அடைய நினைக்கும் இலக்கு வெகுதொலைவில் இருக்கின்றது அவர்கள் அடைய நினைக்கும் இலக்கிற்க்க மிக அதிகமான ஆத்மபலம் வேண்டும்.

அவர்களிடம் ஆத்மபலத்தை அதிகரிக்கும் வழியை சொல்லுவேன். இல்லை என்றால் அவர்களுக்கு எப்படி அம்மனை வைத்து ஆத்மபலத்தை உயர்த்துவது என்பதை யோசித்த செய்துக்கொடுப்பது வழக்கம்.

நீங்கள் அடைய நினைக்கும் எண்ணங்கள் எல்லாம் சரியானது தான் ஆனால் உங்களின் ஆத்மாவில் அந்த பலம் இருக்கின்றதா என்று பார்த்து உங்களின் ஆத்ம பலத்தை அதிகரிக்கும்பொழுது உங்களின் இலக்கை எளிதில் அடையமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: